Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபலங்களின் ஆடிட்டர்களை குறி வைத்து ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு.. சிக்கியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா பிரபலங்களின் ஆடிட்டர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்கள் தொடர்பாக சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில் காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Enforcement directorate ED

இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேரன் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் ஆகியோரின் வீடு உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத் துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பல கோடி ரூபாய் ஊதியமாக பெறுகின்றனர். அந்த ஊதியத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுவதை தவிர்க்க ரொக்கப் பணம் மற்றும் அசையா சொத்துகளாக பெறுவதால குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும், சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு மற்றும் பினாமி பெயர்களில் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் இறக்குமதி செய்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக சினிமா பிரபலங்களின் கணக்கு வழக்குகளை பராமரிக்கும் நபர்களுக்கு பல கோடி வரை பணம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சினிமா பிரபலங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யும் ஆடிட்டர்கள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு, அதற்கான காரணம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+