ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு.. ஏற்கனவே IT ரெய்டு நடந்ததே.. யார் இந்த புள்ளி?
சென்னை: செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில், சென்னை உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரத்தில் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் இன்று காலை முதல் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் முன்னணி ஆடிடட்டரான சண்முகராஜ், பல்வேறு முக்கிய நபர்களின் கணக்குகளை கவனித்து வருபவர், முக்கியமாக, சபரீசன் சம்பந்தப்பட்ட கணக்குகளையும் சண்முகராஜ் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் சண்முகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ஜி ஸ்கொயர்' ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அண்ணாநகரில் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்திக் வீடு, அவரது ஈஞ்சம்பாக்கம் வீடு, ஆடிட்டர் சண்முகராஜன் வீடு உட்பட, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, சைதாப்பேட்டை, அம்பத்துார் உட்பட, சென்னையில் 50 இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தற்போது, செந்தில் பாலாஜி தொடர்புடைய பணப் பரிமாற்ற மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும், ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications