முதலில் ஹிந்தி எதிர்ப்பு! இப்போது நிர்மலாவுக்கு குறி.. யார் இந்த சென்னை அதிகாரி பாலமுருகன்? பின்னணி
சென்னை: சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை ஜாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஜனாதிபதிக்கு சென்னையில் பணியாற்றும் இந்திய வருமான வரித்துறை அதிகாரி பாலமுருகன் பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தான் இந்த பாலமுருகன் யார்? அவரது பின்னணி என்ன பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். அதே கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர்கள் 2 பேருக்கும் பாஜகவின் பிரமுகரான குணசேகரன் என்பவருக்கும் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது விவசாயிகளின் 6 ஏக்கர் நிலத்தை குணசேகரன் அபகரிக்க முயன்று தொல்லை கொடுப்பதாக புகார் உள்ளது. இதற்கிடையே தான் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு 6 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும், அதுபற்றிய விசாரணைக்கு ஆஜராக வேண்டியும் சென்னை அமலாக்கத்துறை சார்பில் இரு விவசாயிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இருவரும் விசாரணணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஜாதி பெயர் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையானது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்திய வருவாய்த்துறை அதிகாரியும் சென்னையில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வரும் பாலமுருகன் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கண்டிக்கத்தக்கது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அமைச்சராக இருக்க தகுதியில்லை. இதனால் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறையை விமர்சித்தும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டார்கெட் செய்தும் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ள அதிகாரி பாலமுருகன் யார்? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பாலமுருகன் சென்னையில் உள்ள இந்திய வருவாய்த்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டில் இவர் சென்னை ஜிஎஸ்டி ஆணையரகத்தில் ஹிந்தி செல் என அழைக்கப்படும் பிரிவின் தலைமை உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்த பிரிவு என்பது ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், கோப்புகளையும் இந்தி மொழியில் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருந்தது.
அப்போது அவர் உயரதிகாரியான மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கம் வாரியத்தின் தலைவருக்கு எழுதிய கடிதம் பரபரப்பபை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில், ‛‛நான் எனது தாய் மொழி என்பது தமிழ். எனக்கு ஹிந்தி மொழியில் ஏபிசிடி கூட தெரியாது. ஹிந்தி செல்லை பொறுத்தமட்டில் அனைத்து கோப்புகளும் ஹிந்தி மொழியில் இருக்க வேண்டும். கோப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கு பணியாற்றும் சூப்பிரண்டுகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 3ல் 2 பங்கு பணியாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியும். ஆனால் எனக்கு ஹிந்தி மொழி தெரியாது. இத்தகைய சூழலில் என்னை இந்த பிரிவுக்கு நியமனம் செய்துள்ளீர்கள். இது என் மீது ஹிந்தி திணிப்பது போன்று உள்ளது. மேலும் பிராமின் ஒருவரிடம் பைபிள் அல்லது குரானை கொடுத்து அதனை படித்து அதனை பரப்ப வேண்டும் என கூறுவதற்கு சமமான செயலாக இது இருக்கிறது. இதனால் இந்த பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications