ஓபிஎஸ் வந்துட்டு இருக்கார்! சட்டென எடப்பாடிக்கு போன மெசேஜ்.. போட்டோவை எடுங்க.. கிளம்புங்க.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்திற்கு அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அங்கே ஓபிஎஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுக்க வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரண்டிற்கும் அஸ்திரவமே பெரியார்தான்.

இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

எடப்பாடி

எடப்பாடி

இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்திற்கு அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அங்கு அதிமுகவினர் சார்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிமுகவினர் அந்த சிலைக்கு மாலை போட்டு, கீழே மலர்கள் வைத்து அலங்காரம் செய்து இருந்தனர். அதோடு அதிமுகவினர் பெரியார் புகைப்படம் ஒன்றையும் அங்கே எடுத்து வந்தனர்.

 பெரியார் புகைப்படம்

பெரியார் புகைப்படம்

பிரேம் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை அதிமுகவினர் எடுத்து வந்து அங்கே வைத்து இருந்தனர். இதையடுத்து அங்கு எடப்பாடி பழனிசாமி வந்து மரியாதை செய்தார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். பெரியார் சிலைக்கு மரியாதை செய்து கொண்டு இருக்கும் போதே, அங்கு இருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் வருவதாக தகவல் சென்றுள்ளது. அண்ணாசாலையில் உள்ள அந்த சிலைக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் திட்டமிட்டு இருந்தார்.

எடப்பாடி

எடப்பாடி


எடப்பாடி அங்கே இருக்கும் அதே நேரத்தில் ஓபிஎஸ் பெரியார் சிலைக்கு அருகில் வந்து கொண்டு இருப்பதாக தகவல் சென்றுள்ளது. இதையடுத்து உடனே எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அவசரமாக கிளம்பினார். ஓ பன்னீர்செல்வம் வருவது தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து உடனே வெளியேறினார். அவரை தொடர்ந்து சட்டென மற்ற மாஜி அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

நெரிசல்

நெரிசல்

இந்த நிலையில்தான் அதிமுகவினர் அங்கிருந்து கிளம்பும் போது அங்கே செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களை எடுத்துவிட்டு சென்றனர். அதோடு பெரியார் படம் அங்கே வைக்கப்பட்டு ருந்தது. அதையும் சட்டென்று தூக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் அங்கே வந்தார். அங்கு வந்து அவர் சிலைக்கு மரியாதை செய்தார். இரண்டு பேரும் அங்கு அடுத்தடுத்து வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் அங்கே ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+