தலைமை யார்?.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் வீடுகளுக்கு சர் புரென பறக்கும் கார்கள்.. அனல் பறக்கும் ஆலோசனை
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவில் எப்போது எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டாரோ அன்று முதல் ஒற்றைத் தலைமை எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இது நேற்று முதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவை முற்றிலும் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் முயற்சித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ்ஸை கடுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தேனியில் ஒட்டிய போஸ்டரிலிருந்து பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்
இதற்கு பதிலடியாக தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அதிமுகவில் என்னென்ன செய்துள்ளேன் என்பதை விவரித்து ஓபிஎஸ் தகவல்களை வெளியிட்டிருந்தார். இதிலிருந்து ஒற்றைத் தலைமை எனும் பொறுப்பை ஏற்க தன்னை விட தகுதியானவர் யாரும் இல்லை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

மாவட்டச் செயலாளர்
இந்த நிலையில்தான் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒற்றைத் தலைமை பேச்சால் கோபமடைந்த ஓபிஎஸ் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இரவோடு இரவாக போஸ்டர்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இரவோடு இரவாக சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றைத் தலைமையே வா என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் வீட்டில் 2ஆவது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் ஆர் பி உதயகுமார், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதே போல் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிலும் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் சி விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்












Click it and Unblock the Notifications