சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலையில் கடித்த பூச்சி.. அடுத்து எல்லாமே போச்சி! அலர்ஜியில் அவதிப்பட்ட எடப்பாடிக்கு அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: பூச்சிக் கடித்ததால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு வீட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

Recommended Video

    OPS-EPS இணைகிறார்களா?

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

    ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்! ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!

    ஈபிஎஸ், ஓபிஎஸ் நீக்கம்

    ஈபிஎஸ், ஓபிஎஸ் நீக்கம்

    அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

    வழக்கு

    வழக்கு

    இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

     பூச்சிக்க

    பூச்சிக்க

    இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். அதிமுகவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் அக்கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதனை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியை பூச்சி கடித்ததால் அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    ஐகோர்ட் உத்தரவு

    ஐகோர்ட் உத்தரவு

    இந்த நிலையில் காலை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    எல்லாமே போச்சு

    எல்லாமே போச்சு

    சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காலமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாமல் போயிருக்கிறது. இந்த தீர்ப்பு வெளியானவுடன் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் பட்டாசு வெடித்து ஆதரவாளர்கள் ஆர்ப்பரிக்க, எடப்பாடி வீடு முன் மிக சிலரே இருந்தனர்.

    English summary
    Edappadi Palanisamy sad after HC verdict on ADMK general council meeting: : பூச்சிக் கடித்ததால் உடலில் அலர்ஜி ஏற்பட்டு வீட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X