விபரீத ராஜயோகம் அடிக்கும்.. எடப்பாடியிடம் சொன்ன ஜோசியர்.. குஷியில் அதிமுக.. ராசியான காலமாமே!
சென்னை: ஜோசியர் ஒருவர் சொன்ன தகவல் காரணமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏக குஷியில் இருக்கிறாராம். தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இது தெம்பை கொடுத்துள்ளதாம்.
அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, புகழ்பெற்ற ஒரு ஜோதிடர், எடப்பாடி பழனிசாமிக்கு 2026 பொங்கலுக்குப் பிறகு நல்ல காலம் தொடங்கும் என்றும், கடினமான காலம் முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கடினமான காலம்
எடப்பாடி பழனிசாமி கடந்த 6-7 வருடங்களாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இரண்டு லோக்சபா தேர்தல் தோல்வி, 1 சட்டசபை தேர்தல் தோல்வி, 7க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல் தோல்விகளை அவர் சந்தித்துள்ளார். அதோடு செங்கோட்டையன் தொடங்கி பல நிர்வாகிகள் விலகல் காரணமாக உட்கட்சி ரீதியாகவும் துவண்டு போய் உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜோசியர் ஒருவர் சொன்ன தகவல் காரணமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏக குஷியில் இருக்கிறாராம். உங்களுக்கு விபரீத ராஜயோகம் அடிக்கும் என்று அந்த ஜோசியர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி உள்ளாராம்.
அந்த ஜோதிடர், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் புத்துணர்ச்சியுடன் கூடிய செல்வாக்கைக் கொண்டுவரும் ஒரு வலுவான "ராஜயோகம்" காலம் நெருங்குவதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்பு, 2026 பொங்கலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஏற்படும் என்று கூறி உள்ளாராம். 2026ம் ஆண்டை ஒரு திருப்புமுனையாகச் சுட்டிக்காட்டி, கடந்த ஆண்டுகளில் சந்தித்த பின்னடைவுகள் படிப்படியாக மறையும் என்று கூறி உள்ளாராம்.
இந்த ஜோதிட கணிப்பிற்குப் பிறகு, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக வலுவான வெற்றியை பதிவு செய்யும் என்பதில் பழனிசாமி உறுதியாக நம்புவதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஜோதிடரின் இந்த வார்த்தைகள் தனிப்பட்ட முன்னேற்றத்தை மட்டுமின்றி, அஇஅதிமுகவின் பரந்த அரசியல் வெற்றியை குறிப்பதாகவும் அவர் கருதுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
எடப்பாடி பழனிசாமி
இவர் எடப்பாடி நீண்ட காலமாக நம்பும் ஜோதிடர் ஆவார். எடப்பாடி பழனிசாமி 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் இருந்தார். கட்சியில் உட்கட்சி மோதல் இருந்தால், நிர்வாகம் அவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு, அஇஅதிமுக உட்கட்சி சவால்கள், தலைமை குறித்த கேள்விகள் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது. அதன் பின்னர், பழனிசாமி தனது நிலையை வலுப்படுத்தவும், கட்சியின் அமைப்புகளின் பலத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரது ஆதரவாளர்கள், இந்த ஜோதிடக் கணிப்பு கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர். திமுகவை வீழ்த்தி அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல.. இந்த பாசிட்டிவ் ஜோதிடம் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
ஜோதிடம்
இருப்பினும், அரசியல் விமர்சர்கள், ஜோதிடம் மட்டும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்காது என்று எச்சரிக்கின்றனர். கூட்டணிகள், பிரச்சார உத்தி, மக்கள் மனநிலை, மற்றும் ஆளும் அரசின் செயல்பாடு ஆகியவை 2026 தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், இத்தகைய கணிப்புகள் கட்சிகளுக்குள் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தூண்டும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
முன்பு இருந்த எம்ஜஆர் தொடங்கி இப்போது விஜய் வரை பலரும் ஜோதிடத்தை தீவிரமாக நம்புகிறார்கள். அப்படி இருக்க எடப்பாடி நம்புவதில் தவறில்லை என்று வாதம் வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications