297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்
சென்னை: அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட 297 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுகவின் பிரதான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பகுதி பகுதியாக வாக்குறுதிகளை வெளியிட்டு வந்தார். ஆனாலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் சாமானியர்களிடம் பேசுபொருளாகவில்லை.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 27 நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதற்கு முன்பாகவே ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி பங்கீட்டை முடித்து, எந்த தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதேபோல் தொகுதிகள் அறிவிப்பதற்கு முன்னதாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக சார்பாக மொத்தமாக 297 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம், கல்விக் கடன் ரத்து, ஆண்களுக்கும் இலசவ பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டன், தீபாவளிக்கு வேட்டி - சேலை, திருமணத்திற்கு பெண்களுக்கு பட்டு சேலை, ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கான உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தற்போது குடும்ப தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ், ரேஷன் கடையில் எண்ணெய் மற்றும் பருப்பு இலவசம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் இப்படியான நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலசவமாக வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவில்லை. அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாளன்று ஃபிளக்ஸ் அடித்த வைத்த கையோடு அதனை மறந்துவிட்டனர்.
அதிமுக ஐடி விங் சார்பாக வீடு வீடாக சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸாக கொடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால் ஒரு தொகுதிகளை தவிர வேறு எங்கும் நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை கூட மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு செல்ல முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
திருமங்கலம், சாத்தூர்.. 2 தொகுதிகளில் குடைச்சல் கொடுக்கும் சசிகலா! தப்பிப்பார்களா நயினார், உதயகுமார் -
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
கிராமங்களில் அதிகரிக்கும் ஆதரவு.. காரைக்குடியில் கரை சேர்வாரா சீமான்? சவால் கொடுக்கும் காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications