அதிமுக விருப்ப மனு விநியோகம்.. கால அவகாசத்தை நீட்டித்த எடப்பாடி பழனிசாமி.. என்ன காரணம்?
சென்னை: அதிமுகவில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதியுடன் விருப்ப மனு பெறுவதர்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது தொண்டர்கள், நிர்வாகிகள் கோரிக்கைக்கு ஏற்ப, டிசம்பர் 28 முதல் 31 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அதிமுக தரப்பில் ஜூலை மாதமே முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் முடிவடைந்தது.

அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. டிசம்பர் 15ஆம் தேதி அதிமுகவினர் பலரும் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கிய போதே, ஆயிரக்கணக்கானோர் பூர்த்தி செய்து கொடுத்தனர்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதிமுக விருப்ப மனுக்கள் விநியோகம் குறைந்தது. இதனை கவனித்த எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டசபைத் தேர்தலை விடவும் கூடுதலாக விருப்ப மனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியே 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதன்பின் விருப்ப மனுக்கள் விநியோகம் முடிவடைந்த சூழலில், தற்போது மீண்டும் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், கால அவகாசம் நீக்கப்படுகிறது.
டிசம்பர் 28 முதல் டிசம்பர் 21 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அதிமுகவில் இருந்து இன்னும் பலரும் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயார் செய்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?











Click it and Unblock the Notifications