குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மொத்தமாக 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இலவசமாக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி முழுமையாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 3 கட்டங்களாக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக அளிக்கப்படும். அதேபோல் மாநிலங்களுக்கான மத்திய நிதி பகிர்வை உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். அதேபோல் அரசு நிலங்களில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
மகளிர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதேபோல் 12வது படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% உயர்த்தப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யப்படும் என்றும், மீனவர்கள் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார்.. தவெகவில் கருப்பு ஆடு.. ஆதவ் அர்ஜுனா நேரடி குற்றச்சாட்டு! -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
கொள்கை அரசியல் பேசாத சுந்தர்.சி.. சிக்கலாகும் சிறுபான்மை மக்கள் வாக்குகள்! மதுரை மத்தி நிலவரம் என்ன -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல! -
மனைவி வெற்றியைவிட.. பென்னாகரம் தொகுதியில் ஜிகே மணி மகன் தோல்வி பெருசு.. தீவிரம் காட்டும் அன்புமணி! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்!












Click it and Unblock the Notifications