"இலவச கேஸ் சிலிண்டர், கல்விக்கடன்" 2021 தேர்தல் அறிக்கையை பட்டி டிங்கரிங் செய்து வெளியிடும் எடப்பாடி
சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக சாமானிய மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.. அதன் செலவை அரசே ஏற்கும்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
அதேபோல் முதியோர் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.
2021 அதிமுக தேர்தல் அறிக்கை
ஏற்கனவே குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் இலவச பேருந்து உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். தற்போது மொத்தமாக 10 வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஒன்று என்பதும் தெரிய வந்துள்ளது. அதனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.
2021ல் 6 கேஸ் சிலிண்டர் அறிவிப்பு
2021ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் வீடு திட்டம், குலவிளக்கு திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் அதிமுக அதே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது.
மிஸ்ஸாகும் புதிய திட்டங்கள்
இது சாமானிய மக்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல் முதியோர் உதவித் தொகை திட்டமும் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டம்தான். அதற்கான பணத்தை மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிகரித்திருக்கிறார். இதனால் அதிமுகவிடம் புதிய திட்டங்கள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அடுத்தது என்ன?
மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதனையும் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் இல்லாததால், அது மக்களிடையே எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications