Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இலவச கேஸ் சிலிண்டர், கல்விக்கடன்" 2021 தேர்தல் அறிக்கையை பட்டி டிங்கரிங் செய்து வெளியிடும் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக சாமானிய மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.. அதன் செலவை அரசே ஏற்கும்.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

அதேபோல் முதியோர் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். அதேபோல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உள்ளிட்ட சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றார்.

2021 அதிமுக தேர்தல் அறிக்கை

ஏற்கனவே குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் இலவச பேருந்து உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். தற்போது மொத்தமாக 10 வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற ஒன்று என்பதும் தெரிய வந்துள்ளது. அதனை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.

2021ல் 6 கேஸ் சிலிண்டர் அறிவிப்பு

2021ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர், அனைவருக்கும் வீடு திட்டம், குலவிளக்கு திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் அதிமுக அதே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது.

மிஸ்ஸாகும் புதிய திட்டங்கள்

இது சாமானிய மக்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல் முதியோர் உதவித் தொகை திட்டமும் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டம்தான். அதற்கான பணத்தை மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிகரித்திருக்கிறார். இதனால் அதிமுகவிடம் புதிய திட்டங்கள் இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

அடுத்தது என்ன?

மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. அதனையும் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் இல்லாததால், அது மக்களிடையே எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+