ஸ்டாலின் ராணுவ கேப்டன் போல் தெரிகிறார்.. எடப்பாடி எப்படி இருந்தார்? நாஞ்சில் சம்பத் சர்ச்சை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேண்ட் போடுவதற்காகவே வெளிநாடு சென்றதாக திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 2069 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக சார்பில் வழங்கப்பட்டன.

அண்ணாமலையின் ஆளுநர் ஆசை
இந்த விழாவில் பேசிய திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், "ரூ.5000 கோடியை முதலீடு செய்ய ஸ்டாலின் துபாய் சென்றிருப்பதாக நாட்டை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். என் தலைவனை அழுக்காக்கிதான் நீங்கள் மாநிலத் கவர்னர் ஆக வேண்டும் என்றால் அழுக்காக்கிவிட்டு செல்லுங்கள். ஆனால், அவதூறுகளை பரப்பாதீர்கள்.

மோடி, அமித்ஷா ஆயிரம் அவதாரம் எடுத்தாலும் ஊடுருவ முடியாது
அதிமுக இருந்த இடத்திற்கு பாஜகவை கொண்டு வந்து நிறுத்த அண்ணாமலை போடும் வேடத்தின் ஒரு காட்சிதான் இது. எந்த காலகட்டத்திலும் மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு எங்கள் தமிழகம் அடிமைபட்டதில்லை. இதுதான் நேற்றைய வரலாறு. இதனால் தான் மோடி, அமித்ஷா ஆயிரம் அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் ஊடுருவ முடியாது.

எடப்பாடி பேண்ட் போட வெளிநாட்டுக்கு சென்றார்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். ஏற்கனவே இருந்த முதலமைச்சரும் வெளிநாட்டுக்கு சென்றார். அவர் பேண்ட் போடுவதற்காகவே வெளிநாட்டுக்கு சென்றார். அவர் பேண்ட் போட்டதை பார்த்தபோது ஹோட்டல் சர்வரை போன்றுதான் இருந்தார்.

ஸ்டாலின் கோட் ஷூட்டில் தலைவர் போல் இருக்கிறார்
எங்கள் தலைவர் ஸ்டாலின், தலைவரை போல், ராணுவத்தின் கேப்டனை போல் துபாய் நகரத்தின் உச்சியில் நின்றார். 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், மு.க.ஸ்டாலினை தனது இசைக்கூடத்திற்கு அழைத்துச் சென்று மூப்பில்லா தமிழ் தாயே என்ற பாடலை மு.க.ஸ்டாலினுக்கு போட்டுக் காண்பித்தார்.

ஸ்டாலினின் துபாயில் எழுதியது
உலகத்தின் உயர்ந்த சிகரமான துபாயின் புரூஜ் கலிபா உச்சியில் எங்கள் தமிழ் பண்பாட்டு அடையாளங்களை விளக்குகிற காணொளி காட்சியை போட்டுக்காட்டுகிறார்கள். அதை பார்த்த முதலமைச்சர் இனி இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்க வேண்டும், வடக்கில் எழுத உரிமை இல்லை என பதிவு செய்து இருக்கிறார்.
மோடியின் கனவு
5 மாதம் பெட்ரோல் விலை ஏறவில்லை. டீசல் விலை ஏறவில்லை. 5 மாநிலத் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 ஏறுகிறது. 2014 ஆம் ஆண்டு மோடி அதிகாரத்துக்கு வரும்போது சமையல் எரிவாயு விலை ரூ.350. இன்று ரூ.1,050. 2024 ஆம் ஆண்டில் அனைத்து மாநிலக் கட்சிகளையும் சீரழித்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று மோடி கனவு காண்கிறார்." எனக் கூறினார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications