இப்படியுமா பிள்ளைகள் இருப்பாங்க.. சென்னை வியாசர்பாடியில் வயதான தாய் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை வியாசர்பாடியில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என வயதான தாய் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி முதல் தெருவில் வசித்து வருபவர் வசந்தா. வயது 72. கணவர் இறந்த பிறகு 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு மூன்று பிள்ளைகள் ஒரு மகள் இருக்கின்றனர். வசந்தாவின் மகன்கள் மற்றும் மகள் திருமணம் ஆன பிறகு குடும்பத்துடன் தனியாக சென்று விட்டனர்.

தனிமையில் வசந்தா அம்மா
வசந்தாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை தனியாக விட்டுச் சென்றுள்ளனர். கணவனை இழந்த பிறகு 15 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். வயசான காலத்திலும் தனியாக வாழ்ந்து வந்த வசந்தா ஆதரவில்லாமல் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஆதரவு இல்லை
வாடகைக்கு இருக்கும் வீட்டிலிருந்து 7 வீடு தள்ளித்தான் மகன்களும் மகள்களும் வசித்து வந்தாலும், ஆதரவு இல்லாமல் வசித்து வந்ததால், மனவேதனையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு
இந்நிலையில் பிள்ளைகளுக்கு இனி பாரமாக இருக்கக் கூடாது என இன்று காலை தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக பார்த்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வியாசர்பாடியில் சோகம்
60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்குப் போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்ககூடாது என தனக்கு தானே மூதாட்டி தீ வைத்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications