ராஜீவ் காந்தி செய்த சின்ன தவறு.. பாஜகவின் மாபெரும் வளர்ச்சிக்கு அடிபோட்ட ஒரு சம்பவம்! நடந்தது என்ன?
சென்னை: அரசியலில் செய்யப்படும் சின்ன.. சின்ன தவறுகளும் கூட.. ஒரு காலத்தில் பெரிய தவறுகளாக மாறும் என்று கூறப்படுவது வழக்கம். அப்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி செய்த ஒரு சின்ன தவறுதான் இன்று பாஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சிக்கு காரணமாக மாறி உள்ளது.
1989 லோக்சபா தேர்தல், 2014 லோக்சபா தேர்தல் இரண்டுமே இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தல்கள் ஆகும். ஒன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை கொண்டு வந்து இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றிய விபி சிங் ஆட்சி 1989ல் பதவி ஏற்றது.

அதன்பின் 2014 லோக்சபா தேர்தல், இந்தியாவில் காங்கிரசின் மாபெரும் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்து, பாஜகவின் பெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்த தேர்தல். இப்போது பாஜக வீழ்த்த முடியாத சக்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வரிசையாக வென்ற பாஜக.. 2024 லோக் சபா தேர்தலிலும் வெல்லும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
அதிலும் தனி மெஜாரிட்டி பெற்று பாஜக மாபெரும் வெற்றியை மீண்டும் சந்திக்கும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட பாஜகவின் எழுச்சிக்கு விதி போட்டது என்னவோ 1989ல் வந்த விபி சிங் ஆட்சி என்றுதான் கூற வேண்டும். அப்போது ராஜிவ் காந்தி செய்த தவறு பாஜகவின் பெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.
1989 லோக்சபா தேர்தல்: 1989 லோக்சபா தேர்தல் ராஜீவ் காந்திக்கு பெரும் ஆசிட் சோதனையாக அமைந்த தேர்தல் ஆகும். இந்திரா காந்தி மரணத்திற்கு பின் 1984ல் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி சிறப்பாக செயல்பட்டாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முக்கியமாக போஃபர்ஸ் ஊழல், பஞ்சாபில் அதிகரித்து வந்த தீவிரவாதம், இலங்கை உள்நாட்டுப் போரில் ராஜீவ் காந்தி தலையிட்டது உள்ளிட்ட பல விஷயங்கள் ராஜீவ் காந்திக்கு எதிராக திரும்பியது.
1984ல் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்த விபி சிங்தான் 1989ல் ஜனதா தளம் கட்சி சார்பாக பிரதமர் ஆனார். 1984ல் ராஜீவின் ஆட்சிக்கு மிகப்பெரிய விமர்சகராக இருந்தவர் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங்,ராஜீவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இலாகாக்களை வைத்திருந்தார். இருப்பினும் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராகவே விபி சிங் விமர்சனங்களை வைத்து வந்தார்.
ராஜீவ் காந்தி மீது விபி சிங் வைத்த விமர்சனங்கள் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரஸ் மற்றும் மக்களவை உறுப்பினர்களில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் ஜனதா தளம் கட்சியை உருவாக்கி காங்கிரசை எதிர்த்து அடுத்த 1989 லோக்சபா தேர்தலிலேயே போட்டியிட்டார்.
கூட்டணிகள்: ஒரு பக்கம் இந்துத்துவா வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்க, இன்னொரு பக்கம் மாநில கட்சிகள் காங்கிரசுக்கு எதிராக கைகோர்க்க தொடங்கிய காலம் அது. 1989ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் இது எதிரொலித்தது.
1989 லோக்சபா தேர்தல்தான் இந்தியாவில் கூட்டணிகளை உருவாக்கி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கிய தேர்தல். அதுவரை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதே வலுவானதாக இருக்கும் என்று பல அரசியல் கட்சிகள் நினைத்த நிலையில் 1989ல் நடந்த லோக்சபா தேர்தல்தான்.. பல சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என்று உணர்த்தியது.
ராஜீவ் காந்தி செய்த தவறு: 1989 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனிப்பெரும் கட்சியாக வந்தும்,ராஜீவ் காந்தி ஆட்சியமைக்க உரிமை கோராமல் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க வழி போட்டுக்கொடுத்தார். தனிப்பெரும் கட்சியாக இருந்தும், பெரும்பான்மை இல்லை, கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை என்பதால், ராஜீவ் காந்தி மாநில கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க வழி போட்டுக்கொடுத்தார்.
அப்போது ஜனதாதள அரசு விபி சிங் தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சிக்கு பாஜகவும் ஆதரவு கொடுத்தது. விபி சிங் அரசுக்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. இப்படி மத்திய ஆட்சியில் இருந்ததுதான் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
பாஜகவின் வளர்ச்சி; விபி சிங்கின் ஜனதாதள அரசு உடன் கூட்டணி அமைத்து பாஜக மத்திய அரசு ஆட்சியில் இருந்ததுதான் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது.
அப்போது ராஜீவ் காந்தியே கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருந்தால், விபி சிங் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார். அதோடு பாஜகவும் மத்திய கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்காது. இப்படி மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்ததுதான் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது. முக்கியமாக மத்திய ஆட்சியில் இருந்த தைரியத்தில்தான் அத்வானி அப்போது ரதயாத்திரை நடத்தினார். அதுவே பாஜக வளர்ச்சிக்கு அடிபோட்டது. இதனால் விபி சிங் அத்வானியை கைது செய்ய, அதனால் பாஜக கூட்டணியை முறிக்க, விபி சிங் ஆட்சி முடிவடைய அதுவே காரணமாக அமைந்தது.
1984ல் வெறும் 2 இடங்களில்தான் பாஜக வென்றது. அதுவே 1989 தேர்தலில் 85 இடங்களில் வென்றது. இப்படி மத்தியில் ஆட்சியில் இருந்ததால் அடுத்த 1991 தேர்தலிலேயே, 120 இடங்களில் பாஜக வென்றது. 1989 வரை இரட்டை இலக்கத்தில் வென்ற பாஜக அதற்கு அடுத்த தேர்தலில் இருந்து மூன்று இலக்கத்தில் வெல்ல தொடங்கியது. ராஜீவ் செய்த தவறால் பாஜகவிற்கு எழுச்சி கிடைத்து அடுத்த 1991 தேர்தலில் 120 அதிக தொகுதிகளை வெல்ல முடிந்தது.
ராஜிவ் காந்தியின் பெரிய தவறு: காங்கிரஸ் அல்லாத முதல் அரசு அமைய ராஜிவ்காந்தியின் கூட்டணி அரசு குறித்தான விழிப்புணர்வு இன்மை காரணமாகியது. 2004ல் இதைவிட குறைவாக அதாவது 145 சீட் ஜெயித்தும் சோனியா முயற்சியால் கூட்டணி அரசாங்கத்தை நடத்த முடிந்தது. ஆனால் அதற்குள் பாஜக வளர்ந்துவிட்டது.
அப்போது மட்டும் ராஜிவ் காந்தி கொஞ்சம் யோசித்து முடிவெடுத்து இருந்தால் பாஜகவின் மாபெரும் வளர்ச்சி இப்போது சாத்தியம் ஆகி இருக்காது!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications