வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!
சென்னை: தமிழகத்தில் முழு நேர டிஜிபி நியமன விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சில அதிரடி நடவடிக்கைகளை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கவிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் ஓய்வு பெற்றதை அடுத்து முழு நேர டிஜிபியை தமிழக அரசு நியமிக்கவில்லை. அந்த பதவியை பொறுப்பு என்கிற அளவிலேயே வைத்திருக்கிறது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்த தமிழக அரசு, முழு நேர டிஜிபியை நியமிப்பதில் சட்டரீதியாக காலதாமதம் செய்தது.

டிஜிபியை தமிழக அரசு
டிஜிபி நியமனத்தில் சீனியாரிட்டிபடியும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படியும் தகுதியுள்ள ஆறு நபர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இது தொடர்பான கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த 6 பேரை பரிசீலித்து அதில் 3 நபர்களை தமிழக அரசுக்கு கமிட்டி பரிந்துரை செய்யும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு நியமிக்கலாம்.
ஆனால், இத்தகைய நடைமுறைகள் நடந்தும் தமிழக அரசு இதில் அக்கறைக்காட்ட மறுத்தது. இதற்கான சட்டரீதியான காரணங்களை வைத்திருக்கிறது தமிழக அரசு. இந்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
மூத்த வழக்கறிஞர் வில்சன் பிளான்
கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''டிஜிபி தோ்வுக்கான ஐந்து உறுப்பினா்களைக் கொண்ட தோ்வுக் குழுவை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி யுபிஎஸ்சி அமைத்தது. மாநில அரசின் இரண்டு பிரதிநிதிகள் அதில் இடம்பெற்றனர். ஆனால், பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனும் முழு நேர டிஜிபிக்கான பரிசீலனையில் உள்ள ஒரு வேட்பாளா் என்பதால், அவருக்குப் பதிலாக கூடுதல் தலைமைச் செயலாளா் பதவியில் உள்ள உள்துறைச் செயலாளரை அக்குழுவில் சோ்க்குமாறு யுபிஎஸ்சியிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த கோரிக்கையை யுபிஎஸ்சி நிராகரித்துள்ளது'' என்று வாதிட்டாா்.
பொறுப்பு டிஜிபி
இதனைத் தொடர்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ''யூ.பி.எஸ்.சி. குழுவில் மாநில அரசின் இரண்டு உறுப்பினா்களைக் கொண்டிருக்க தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிமை இருக்கிறது. பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக டிஜிபியை விட பதவி மற்றும் அந்தஸ்தில் உயா்ந்த அதிகாரியைச் சோ்க்க தமிழ்நாடு மாநிலத்திற்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம். டி.ஜி.பி பதவிக்கான திருத்தப்பட்ட பட்டியலை யூபிஎஸ்சியிடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நாங்கள் உத்தர விடுகிறோம். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
இந்த உத்தரவை தொடர்ந்து யூபிஎஸ்சிடம் பட்டியல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை. இதற்கிடையே விரைவில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
முழு நேர டிஜிபியை நியமிப்பதில் கால தாமதம்
இந்த நிலையில்தான், முழு நேர டிஜிபியை நியமிப்பதில் கால தாமதம் ஏற்படுத்தப்பட்டு வருவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தின் நிர்வாகம் அனைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். அப்போது, தேர்தலை முன்வைத்து உயரதிகாரிகள் பலரும் மாற்றப்படுவர். ஏற்கனவே ஒரே இடத்தில் 3 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் அதிகாரிகளை மாற்றுங்கள் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப பல மாற்றங்களை செய்தது தமிழக அரசு.
இருப்பின் தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும், உயரதிகாரிகள் மாற்றப்படுவதும் நிகழும். அந்த வகையில் பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமனை மாற்றி விட்டு புதிதாக தங்களுக்கு வசதியான சட்டரீதியாக தகுதியுள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக அத்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. பொதுவாக தேர்தல் காலத்தில் டிஜிபி மாற்றப்பட்டால் புதிதாக நியமிக்கப்படுபவர் தேர்தல் கால டிஜிபி என்கிற போஸ்டிங்கில்தான் வைக்கப்படுவார். தேர்தல் கால டிஜிபி என்றுதான் அழைக்கப்படவும் செய்வார்.
ஆனால், இந்த முறை அப்படி ஒரு நியமனம் நடக்கிறபோது தேர்தல் கால டிஜிபி என சொல்லப்படாமல் முழு நேர டிஜிபியாக நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாகவும் அதற்கான ஆலோசனைகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- சிறப்பு நிருபர் எழில்
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications