அவசரம் அவசரமாக 7 திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி!
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசரகதியில் ஏழு திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்தது. இதற்கு முன்பாக, ஏழு திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டயுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துவிடும் என்பதால் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாய் 864 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை சார்பில் பல மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை பல்கலை கழக மெரினா வளாகத்தில் தொல்காப்பியர் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொல்காப்பியர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications