லிஸ்ட் வருது: 27-ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம்.. தலைமை செயலகத்தில் இன்று அனைத்துகட்சி கூட்டம்
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.. வரும் 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வருடந்தோறும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும்... அந்தவகையில், இந்த வருடமும் நடைபெற உள்ளது.
லிஸ்ட்: வரும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு டிசம்பர் 12வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2024 ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுக்குப்பிறகு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
வாக்காளர் பட்டியல்: அந்தவகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க போகின்றன.. தமிழகத்தை பொறுத்தவரை, நாளை மறுநாள் அதாவது, அக்டோபர் 27-ம் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன. இதை முன்னிட்டுதான் இன்று அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதில், "வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழலில், அக்டோபர் 25-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்து கட்சிகள்: இதில், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகளும் பங்கேற்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில், பொதுமக்கள் வசதிக்காக நவ 4, 5 மற்றும் 18, 19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
எதிர்பார்ப்பு: அந்தவகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இன்று நடக்கும் இந்த அனைத்து கட்சி கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications