Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராமரிப்பு பணி.. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யபட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை தான். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் பீக் நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து போய்விடும் என்ற அளவுக்கு பயணிகளுக்கு இந்த மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது.

chennai electric railway tambaram

கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில் சேவையை தான் நம்பியிருக்கிறார்கள். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.

மேலும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யபட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் 30 - 45 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான சிறப்பு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கடற்கரையில் இருந்து பல்லாவரத்திற்கு இன்று காலை 6.15. 6.55, 7.20, 7.45, 8, 8.35, 9.38, 10.10, 10.40, 11.20, 12.00, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, 4.10, 4.30, 4.50, 5.10, 5.50, 6.20, 6.50, 7.00 மணி வரை இயக்கப்படும். இரவு 8 மணியில் இருந்து கடற்கரை - தாம்பரம் வரை மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

இதேபோன்று பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை இன்று காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, 11.35, 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, 4.00, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40, 7.15, 7.40, 7.50 மணி வரை இயக்கப்படும். இரவு 8 மணிக்கு பிறகு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+