420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்
சென்னை: 200 யூனிட் மின்சாரம் இலவசம் என விஜய் தலைமையிலான அரசு கடந்த மே 10ம் தேதி அறிவித்தது. அதன்பிறகு பலருக்கும் மின் கட்டணம் ஏன் இவ்வளவு வந்துள்ளது. 200 யூனிட்டை கழித்தால், எங்களுக்கு 50 ரூபாய் தானே வரும்.. 100 ரூபாய் தானே வரும்.. எங்களுக்கு புரியவில்லை என்று கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். இவர்களின் சந்தேகங்களை மின்சார வாரியம் தீர்த்து வருகிறது. அந்த வகையில் சரவணன் என்பவர் 420 யூனிட்டிற்கு ஏன் இந்த அளவிற்கு கட்டணம் வந்துள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 101 - 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 100 யூனிட்கள் கழிக்கப்பட்டு மீதமுள்ள யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால 2026 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.

அதன்படியே, முதல்வராக பதவியேற்ற விஜய், தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மே 10-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் என்ற பழைய திட்டமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது
இதற்காக மின்சார கணக்கீட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கையும் அப்போது அனுப்பியது. கட்டண மென்பொருளில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதன்படியே 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுகிறார்கள்.
அதேநேரம் பலர் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் ஏன்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். தமிழ்நாடு அரசு, மே 10, 2026 முதல் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தது. ஆனால், இந்த மாதம் எனது மின் நுகர்வு 420 யூனிட்டுகளாக உள்ளது; மின்கட்டண ரசீதில் 200 யூனிட்டுகளுக்குப் பதிலாக, 100 யூனிட்டுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சரவணன் என்பவர் கூறியிருந்தார்
இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த விளக்கத்தில், தற்போதைய மின் கட்டண விவரம் (மே 25)
மொத்தப் பயன்பாடு: 423 யூனிட்டுகள்
வழக்கமான கட்டணம் (423 யூனிட்டுகளுக்கு): ரூ. 1320
மானியக் காலம்: மே 10 முதல் மே 25 வரை (மொத்தம் 15 நாட்கள் மட்டுமே இந்த சுழற்சியில் மானியத்திற்குத் தகுதியானவை).
கட்டணக் கழிவு மற்றும் செலுத்த வேண்டிய தொகை
இந்த 15 நாட்களுக்கான கணக்கீட்டின்படி, வழக்கமான 100 இலவச யூனிட்டுகளுடன் கூடுதலாக 27 யூனிட்டுகள் மானியத்திற்குத் தகுதியாகப் பெறுகின்றன.
0 முதல் 100 யூனிட்டுகள் வரை: இலவசம்
கூடுதல் 27 யூனிட்டுகளுக்கான மானியம்: ரூ. 63
இறுதிக் கணக்கீடு:
வழக்கமான கட்டணம்: ரூ. 1320
கழிவு (மானியம்): (-) ரூ. 63
நீங்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை: ரூ. 1257
அடுத்த மாதக் கணக்கீடு (அடுத்த பில்லிங் சுழற்சி)
அடுத்த மாத மின் கணக்கீட்டின் போது, உங்களுடைய மொத்தப் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்குள் இருந்தால், புதிய மானியத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை இலவசமாகப் வழங்கப்படும்" இவ்வாறு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்














Click it and Unblock the Notifications