மனைவி பிரசவத்திற்கு லீவு கேட்டா.. மருத்துவமனையிலிருந்து வேலை பார்க்க சொல்லும் கார்ப்பரேட் நிர்வாகம்!
சென்னை: வொர்க்-லைப் பேலன்ஸ் என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிர்வாகங்கள், ஊழியர்களை நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் தனது மனைவியின் பிரசவத்திற்கு விடுப்பு கேட்டிருக்கிறார். இதற்கு மேலாளர் சொன்ன பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்திருக்கிறார். ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.

மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் லீவு தர மறுத்த மேனேஜர், இப்போதைக்கு லீவு கிடையாது என்றும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு லீவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு மாற்று வழி மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஊழியர், "என்னால் மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியாது. என்னுடைய மனைவிக்கு முதல் பிரசவம் இது. எனவே இரண்டு நாட்கள் விடுப்பு தேவை" என்று கேட்டிருக்கிறார்.
பின்னர் வேண்டா வெறுப்பாக மேனேஜர் லீவு கொடுத்து இருக்கிறார். இந்த வாட்ஸ்அப் உரையாடலை ஊழியர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஊழியர்களுக்கு உரிய காலத்தில் விடுப்பு கொடுப்பது, ஊழியர்களுடைய உரிமைகளை பாதுகாப்பது, உழைப்பு சுரண்டலை தடுப்பது ஆகியவற்றை உறுதி செய்ய சமீபத்தில்தான் நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்பட்டது. இருப்பினும் கார்ப்பரேட் ஊழியர்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் உரையாடல் குறித்து சோசியல் மீடியாக்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். பிரசவ காலத்தில் கூட விடுப்பு கொடுக்க முடியாத அளவுக்கு இந்திய மேனேஜர்கள் ஏன் கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்!












Click it and Unblock the Notifications