ஊழியர்கள் நல்லா இருந்தா தான் தொழிலில் வளர்ச்சி காட்ட முடியும்.. சரவணபவன் ராஜகோபாலின் பாலிசி
Recommended Video
சென்னை: பெண்ணாசை கண்ணை மறைக்க கூடவே ஜோதிடமும் உசுப்பி விட, பல்லாண்டுகளாக ஊர் தூற்றும் மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்.
சாதாரண கிராமத்தில் பிறந்து டீக்கடையில் வேலை பார்த்து, தரையை துடைத்து என பல போராட்டங்களை கடந்து தான் மிகப்பெரிய ஓட்டல் அதிபரானார் ராஜகோபால். ஏற்கனவே 2 மனைவிகள் இருந்த நிலையில், ஆஸ்தான ஜோதிடர்களின் தவறான வழிகாட்டுதலால் கடந்த 20 வருடங்களாக சீரழிந்து நின்றது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

என்ன தான் ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஜீவஜோதியை மூன்றாவது தாரமாக திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை போட்டுத் தள்ளும் அளவிற்கா ஒரு தொழிலதிபரின் மூளை மழுங்கியிருக்கும் என தூற்றாதவர்களே இல்லை.
ராஜகோபாலை ஊரே தூற்றினாலும் சரவணபவன் ஊழியர்களின் பதில் கண்ணீர் தான். ஏனெனில் தனது உணவக ஊழியர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவராகவே துவக்கம் முதலே இருந்து வந்துள்ளார் ராஜகோபால்.
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்ட போது கூட, அவரது உறவினர்களை விட ஊழியர்களே அதிகளவில் மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்தது இதற்கு சாட்சி என கூறலாம்.
ருசியை காட்டிலும் பசி தீர சாப்பிட வேண்டும் என்பதே அத்தியாவசியமாக இருந்தது ராஜகோபால் ஓட்டல் துவங்கிய 1970-ம் ஆண்டுகளில். நல்ல தரமான உணவு பதார்த்தங்களை வழங்குவதோடு மட்டுமின்றி, ஊழியர்களின் வேலை சூழலை நல்ல நிலையில் வைத்திருப்பதும் சரவணபவனின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை ராஜகோபால் பின்பற்ற காரணம், வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, தட்டை கழுவும் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும் என்பதற்காக தான் என அவரை அறிந்தவர்கள் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு முதலில் தேவையான வேலை உறுதியை வழங்கி விடுவாராம் ராஜகோபால்.
கூடவே இருப்பிடத்தையும் வழங்கி சரியான நேரத்தில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. வெளியூரிலிருந்து தனது உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ஊருக்கு அனுப்பி விடுவாராம். மேலும் ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்பாராம்.
ஊழியர்களை சிறப்பாக கவனித்து கொண்டாலே தொழில் உற்பத்தி தானாகவே அதிகரிக்கும் என்பதே ராஜகோபாலின் தாரக மந்திரமாக இருந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications