ஊழியர்கள் நல்லா இருந்தா தான் தொழிலில் வளர்ச்சி காட்ட முடியும்.. சரவணபவன் ராஜகோபாலின் பாலிசி
Recommended Video
சென்னை: பெண்ணாசை கண்ணை மறைக்க கூடவே ஜோதிடமும் உசுப்பி விட, பல்லாண்டுகளாக ஊர் தூற்றும் மனிதராக வாழ்ந்து மறைந்துள்ளார் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால்.
சாதாரண கிராமத்தில் பிறந்து டீக்கடையில் வேலை பார்த்து, தரையை துடைத்து என பல போராட்டங்களை கடந்து தான் மிகப்பெரிய ஓட்டல் அதிபரானார் ராஜகோபால். ஏற்கனவே 2 மனைவிகள் இருந்த நிலையில், ஆஸ்தான ஜோதிடர்களின் தவறான வழிகாட்டுதலால் கடந்த 20 வருடங்களாக சீரழிந்து நின்றது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

என்ன தான் ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஜீவஜோதியை மூன்றாவது தாரமாக திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை போட்டுத் தள்ளும் அளவிற்கா ஒரு தொழிலதிபரின் மூளை மழுங்கியிருக்கும் என தூற்றாதவர்களே இல்லை.
ராஜகோபாலை ஊரே தூற்றினாலும் சரவணபவன் ஊழியர்களின் பதில் கண்ணீர் தான். ஏனெனில் தனது உணவக ஊழியர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவராகவே துவக்கம் முதலே இருந்து வந்துள்ளார் ராஜகோபால்.
சமீபத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்ட போது கூட, அவரது உறவினர்களை விட ஊழியர்களே அதிகளவில் மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்தது இதற்கு சாட்சி என கூறலாம்.
ருசியை காட்டிலும் பசி தீர சாப்பிட வேண்டும் என்பதே அத்தியாவசியமாக இருந்தது ராஜகோபால் ஓட்டல் துவங்கிய 1970-ம் ஆண்டுகளில். நல்ல தரமான உணவு பதார்த்தங்களை வழங்குவதோடு மட்டுமின்றி, ஊழியர்களின் வேலை சூழலை நல்ல நிலையில் வைத்திருப்பதும் சரவணபவனின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை ராஜகோபால் பின்பற்ற காரணம், வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, தட்டை கழுவும் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும் என்பதற்காக தான் என அவரை அறிந்தவர்கள் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு முதலில் தேவையான வேலை உறுதியை வழங்கி விடுவாராம் ராஜகோபால்.
கூடவே இருப்பிடத்தையும் வழங்கி சரியான நேரத்தில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. வெளியூரிலிருந்து தனது உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ஊருக்கு அனுப்பி விடுவாராம். மேலும் ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்பாராம்.
ஊழியர்களை சிறப்பாக கவனித்து கொண்டாலே தொழில் உற்பத்தி தானாகவே அதிகரிக்கும் என்பதே ராஜகோபாலின் தாரக மந்திரமாக இருந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications