Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை முதல் சென்னையில்.. மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகம்! காலி பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் ரிட்டர்ன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 6) முதல் அமலுக்கு வருகிறது. மது பாட்டில்களை வாங்கும்போது கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை அதே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒப்படைத்து ரூ.10 திரும்பப் பெறலாம்.

நாளை (ஜனவரி 6 ஆம் தேதி) முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.

Empty Bottle Return Scheme at TASMAC Shops in Chennai Begins Tomorrow 10 Refund on Bottle

மதுப்பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மது பாட்டில்களை வாங்கும் போது, அதன் விலையுடன் கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும். மது வாங்கும் போது பாட்டிலுக்கான கூடுதல் வைப்புத் தொகையாக (Deposit) ரூ. 10 செலுத்த வேண்டும். மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளிலோ ஒப்படைக்கலாம். பாட்டிலை ஒப்படைக்கும் போது, ஏற்கனவே கூடுதல் தொகையாகச் செலுத்திய ரூ.10 ஐ வாடிக்கையாளர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தவேண்டும்.

மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அதன்படி, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் ஏற்கனவே நீலகிரி, கோவை, பெரம்​பலூர், அரியலூர், நாகை, திரு​வாரூர், தரு​மபுரி, தேனி, திண்டுக்கல் மற்​றும் கன்னியாகுமரி உள்​ளிட்ட மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+