முடிவுக்கு வரும் வொர்க் ப்ரம் ஹோம்? ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டிசிஎஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய உத்தரவை அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது. இதனால் ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்ற தொடங்கின.

இதையடுத்து கடந்த 2021ல் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் அழைத்து கொண்டன. இருப்பினும் சில நிறுவனங்கள் இன்னும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மையான உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' குறித்து ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு என்பது ஊழியர்களின் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது டிசிஎஸ் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் முறை என்பது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இந்த முறை என்பது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. என அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் வாரம் 3 நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் 1ம் தேதி முதல் ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட ‛வொர்க் ப்ரம் ஹோம்' செய்யவும் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இதுபற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை எச்ஆர் அதிகாரியான (Chief Human Resources Officer) மிலிந்த் லக்காட் கூறுகையில், ‛‛வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது அனைவருக்கும் மிகவும் வசதியான ஒரு வாய்ப்பாகும்.
ஆனால் சில குறைபாடுகள் இருந்தன. நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும்போது பணியாளர்கள் திறம்பட வேலை செய்யலாம். அதோடு புதிதாக பணியில் சேர்வோருக்கு அனுபவசாலிகளால் வழிக்காட்ட முடியும்'' என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்பாது டிசிஎஸ் நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' வாய்ப்பை முடித்து கொள்ளும் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications