Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவுக்கு வரும் வொர்க் ப்ரம் ஹோம்? ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டிசிஎஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய உத்தரவை அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது. இதனால் ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்ற தொடங்கின.

End of Work From Home? TCS company asks to its employees to work from office for 5 days in a week

இதையடுத்து கடந்த 2021ல் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் அழைத்து கொண்டன. இருப்பினும் சில நிறுவனங்கள் இன்னும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மையான உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' குறித்து ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு என்பது ஊழியர்களின் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது டிசிஎஸ் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் முறை என்பது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இந்த முறை என்பது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. என அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் வாரம் 3 நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் 1ம் தேதி முதல் ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கூட ‛வொர்க் ப்ரம் ஹோம்' செய்யவும் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இதுபற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை எச்ஆர் அதிகாரியான (Chief Human Resources Officer) மிலிந்த் லக்காட் கூறுகையில், ‛‛வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது அனைவருக்கும் மிகவும் வசதியான ஒரு வாய்ப்பாகும்.

ஆனால் சில குறைபாடுகள் இருந்தன. நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும்போது பணியாளர்கள் திறம்பட வேலை செய்யலாம். அதோடு புதிதாக பணியில் சேர்வோருக்கு அனுபவசாலிகளால் வழிக்காட்ட முடியும்'' என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்பாது டிசிஎஸ் நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' வாய்ப்பை முடித்து கொள்ளும் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+