சென்னை வன வாணி பள்ளியில் மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை! பெற்றோர்கள் புகார்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி எனும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அனுமதியின்றி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. புகாரின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தாங்கு திறன் சோதனை என்றால் என்ன?: பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது மனிதர்கள் எந்த அளவுக்கு சோதனையை தாங்குகிறார்கள் என்பதை அளவிடுவதுதான் தாங்கு திறன் சோதனை எனப்படுகிறது. வனவாணி பள்ளியில் மாணவர்களை ஓட வைத்து அவர்களுக்கு எவ்வளவு வியர்க்கிறது, வெளியேறும் வியர்வையின் அளவு என்ன என்பது குறித்தும், வியர்வை சோதனைக்காகவும் எடுத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சஸ்பெண்ட்: இன்னும் சொல்லப்போனால், மாணவர்களுக்கு மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இதனை பள்ளி நிர்வாகம் மறுத்திருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மீண்டும் அவர் பணிக்கு வரும்போது வேறு இடத்திற்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து நாளை மறுநாள் பள்ளியில் ஆய்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளக்கம்: இனி வரும் காலங்களில் பெற்றோரின் அனுமதியின்றி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படாது என்றும், உரிய அனுமதி பெறப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications