ஈசிஆர் ரோட்டில் யாருங்க? சென்னையின் 10 இடத்தில் ரெயிடு.. ஆபீசர்களுக்கு போன "மெசேஜ்".. யார் தெரியுமா?
சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், மிகப்பெரிய பரபரப்பு காலை நேரத்திலேயே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சமீப காலமாகவே, அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் நிறைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
முக்கியமாக, தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொருமுறை ரெய்டுகளின்போதும், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகிறார்கள்.. இது தொடர்பான விசாரணையையும் நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகிறார்கள்,

என்ன காரணம்: கடந்த வாரம்கூட, சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்... கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்றது..
முக்கியமாக, சென்னை கோட்டூர்புரத்தில் விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.. அதுபோலவே, தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
சென்னை: இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் பிரதான இடங்களில் காலையிலேயே அதிகாரிகள் சோதனையை துவங்கியிருக்கிறார்கள்.. சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..
அதாவது, சென்னையில் சில கட்டுமான நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடப்பதாக அமலாக்கத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னையில் ஆர்ஏ புரம், ஈசிஆர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு: சோதனை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஒரே நேரத்தில் சென்னையின் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications