Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் பரபரப்பு.. இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களில் ஒன்று இந்தியா சிமெண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஶ்ரீநிவாசன். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக இருக்கும் சிஎஸ்கே நிறுவனம் இந்த க்ரூப்பிற்கு சொந்தமானதாகவே இருக்கிறது.

Enforcement department raids in india cement office in Chennai

இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாகச் சோதனை நடத்தினர்.

கடந்த புதன்கிழமை ஜனவரி 31ஆம் தேதி இந்த ரெய்டு தொடங்கிய நிலையில், இந்த சோதனை நேற்று (பிப்ரவரி 1) வியாழக்கிழமை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999-ன் விதிகளின் கீழ் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்ததால் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ரெய்டு குறித்த தகவல் வந்ததும் பங்குச்சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் கடுமையாகச் சரிந்தது. ஒரே நாளில் அதன் பங்குகள் விலை ரூ.20 வரை குறைந்தது. இதற்கிடையே இந்த சோதனை தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.

அதில் அமலாக்கத் துறை கோரிய அனைத்து விளக்கங்கள் மற்றும் ஆவணங்களையும் வழங்கியதாகவும்,, இந்த விசாரணையால் நிறுவனத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+