Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதைப் பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணப் பரிமாற்றம்! அமலாக்கத்துறை வசம் ஜாபர் சாதிக் சகோதரர் சலீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

Zafar Sadiq enforcement directorate

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் சுமார் 21 கோடியை சில முக்கிய பிரமுகர்களுக்கு ஜாஃபர் சாதிக் கொடுத்திருக்கிறார் என கூறப்பட்டது. இதற்கிடையே போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சாதிக் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது சலீமிடம் அமலாக்கதுறை காவலில் தங்களை எடுக்க மனு தாக்கல் செய்துள்ளார்கள் இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார்.

அதற்கு பதிலளித்த முகமது சலீம் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை அடுத்து முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்க காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையை காண அனுமதிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+