நிழல் முதல்வரே அவர்தான்.. சீனுக்குள் சிக்கிய ஷாருக்கான்! அப்போ உதயநிதி? திருச்சி சூர்யா திடுக் தகவல்
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும்.. விக்ரம் ஜூஜூ எல்லாம் நார்மல் மிடில் கிளாஸ் பையன். இப்போது அவர் பெரிய கோடீஸ்வரன். சினிமா நிறுவனங்களுக்கு எல்லாம் இவர்தான் ஃபண்ட் செய்கிறார். பெரிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இவரிடம் நட்பாக உள்ளனர். ஷாருக்கான் உடன் கூட இவர் நெருக்கமாக உள்ளார், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள். திருச்சியில் உள்ள ஒரு நபரின் வழியாக இவர்கள் எல்லாம் உதயநிதியிடம் நெருக்கம் ஆனார்கள். ஆகாஷ் பாஸ்கரன் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான உறவினர். அதில் விக்ரம் ஜூஜூ எல்லாம் நார்மல் மிடில் கிளாஸ் பையன். இப்போது அவர் பெரிய கோடிஸ்வரன். சினிமா நிறுவனங்களுக்கு எல்லாம் இவர்தான் ஃபண்ட் செய்கிறார்.
பெரிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இவரிடம் நட்பாக உள்ளனர். ஷாருக்கான் உடன் கூட இவர் நெருக்கமாக உள்ளார். இவர்கள் எல்லோருடனும் இவர் நெருக்கமாக உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. அட்லீ, விக்னேஷ் சிவன் எல்லாம் இந்த குழுவை சேர்ந்தவர்கள்தான். அதனால்தான் செஸ் போட்டியின் போது விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பு பொறுப்பு வழங்கப்பட்டது. அதெல்லாம் இந்த நட்பு வட்டாரத்தில் இருந்து வந்தது.

அவரிடம் உள்ள வாட்ச்சுகள் மட்டுமே பல கோடிக்கு இருக்கும். 230 கோடி ரூபாய்க்கு இவர் வாட்ச் மட்டும் வைத்து இருக்கிறார். அப்படி என்றால் அவரிடம் எவ்வளவு பணம் இருக்கும். விக்ரம் ஒருவரிடம் இப்படி பணம் இருந்தால் அந்த கேங்கில் உள்ளவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும். அதிலும் ரத்தீஷ் வேலு எல்லாம் உண்மையான டான் போல செயல்படுகிறார். அவர்தான் நிழல் முதல்வர் போல செயல்படுகிறார். பல மாவட்ட எஸ்பிக்களை நியமிப்பதே ரத்தீஷ்தான். அந்த அளவிற்கு தீவிரமான பவர் கொண்டவர் இவர், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications