சென்னையில் கட்டுமான நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை.. 5 இடங்களிலும் நிறைவு
சென்னை: சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க் துறை சோதனை நிறைவடைந்தது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணைராணுவப் படையினரின் உதவியுடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூட ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கோட்டூர்பரம், திநகர், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவான்மியூரில் நவீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இங்கெல்லாம் துணை ராணுவ படையினரின் உதவியுடன் சோதனை நடந்தது. தற்போது 5 இடங்களிலுமே அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications