ஜெ. நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை... துபாயில் இருந்து பொறியாளர்கள் வருகை
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று வடிவமைக்க துபாயில் இருந்து பொறியாளர்களும், கட்டுமான ஊழியர்களும் சென்னை வந்துள்ளனர்.
வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது நினைவிடத்தை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ. 50 கோடி
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினாவில் ரூ.50 கோடி மதிப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று நுழைவுவாயில் பகுதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வரும் பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

துபாய் டூ சென்னை
ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்ற பகுதியை பொருத்துவதற்காக துபாயில் இருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் மேற்பார்வையிலும், ஆலோசனையின் பேரிலும் பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரமாண்டம்
வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினமே அவரது நினைவிடத்தையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த விழாவை அவர் மிக பிரமாண்டமாக நடத்த விரும்புகிறாராம்.

கண்காணிப்பு
ஜெயலலிதா நினைவிடம் முழு வடிவத்தை பெற உள்ளதால் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் கட்டுமானப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இன்னும் நூறாண்டு கடந்தாலும் தனது ஆட்சியில் கட்டப்பட்ட ஜெ. நினைவிடம் கம்பீரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் முதலமைச்சர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications