பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து.. பிரிகேட் குழுமம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் கட்டப்பட்டு வந்த 'பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்' அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிகேட் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் குடியிருப்பு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி குறித்து பிரிகேட் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA), சென்னையின் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் குடியிருப்புத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை (EC) சமீபத்தில் ரத்து செய்துள்ளதற்கு பிரிகேட் குழுமம் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

Environmental clearance for apartment in Perumbakkam revoked Brigade Group clarification

இந்த ரத்து நடவடிக்கை தன்னிச்சையானது, உண்மைக்கு புறம்பானது மற்றும் சட்டப்படி நிலைக்காது ஆகும். இந்தத் திட்டப்பகுதி தனியார் பட்டா நிலங்களைக் கொண்டது என்பதையும், 1935-ஆம் ஆண்டு வரையிலான வருவாய் ஆவணங்களில் இவை புஞ்சை நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு, 1985 முதல் தற்போதைய நில உரிமையாளர்களிடம் தொடர்ச்சியாக கைவசம் இருந்து வருகிறது என்பதையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

பிரிகேட் குழுமம் 2022-ல் நில உரிமையாளருடன் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் (JDA) செய்தது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டபோதும் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றபோதும், முன்னணி செய்தித்தாட்களில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. அனைத்துத் தகுந்த ஒப்புதல்களும் ஜனவரி 2025-க்குள் பெறப்பட்டுவிட்டன. மேலும், சமூக ஊடகங்களில் எழுந்த சில குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினரால் அக்டோபர் 28, 2025 தேதியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன:

இந்த நிலங்கள் தனியார் பட்டா நிலங்கள்

அதற்கேற்ப தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியான சதுப்புநில எல்லைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அக்டோபர் 28, 2025 தேதியிட்ட இந்தச் செய்திக்குறிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கீழ்தான் தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையம் செயல்படுகிறது. இன்றுவரை, இந்தத் திட்டப்பகுதி சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் கீழ் அறிவிக்கப்பட்ட எந்தவொரு சதுப்புநில பகுதிக்குள்ளும் வரவில்லை, எந்தவொரு அதிகார அமைப்பும் அவ்வாறு கூறவும் இல்லை.

முக்கியமாக, 2026 பிப்ரவரி 10 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் திட்டம் தொடர்பான பொதுநல வழக்கைத் (PIL) தள்ளுபடி செய்தது; இதில் SEIAA, தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையம் மற்றும் இதர அரசு அமைப்புகள் தரப்பினராக இருந்தன. ராம்சார் (Ramsar) செயல்முறையின் கீழ் களப்பரிசோதனை நிலுவையில் உள்ளதால், இந்த நிலத்தை சதுப்புநிலம் என்று உறுதியாக வகைப்படுத்த முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது. பல மாதங்கள் நீடித்த இந்த விசாரணை நடவடிக்கைகளின் போது, எந்தவொரு அதிகார அமைப்பும் இந்த நிலம் சதுப்புநிலம் என்றோ அல்லது இதற்கான அனுமதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றோ சமர்ப்பிக்கவில்லை.

Environmental clearance for apartment in Perumbakkam revoked Brigade Group clarification

ரத்து செய்வதற்குக் கூறப்பட்ட அடிப்படையானது, 'பொருந்தும் பட்சத்தில்' சதுப்புநில ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்கிற ஒரு நிலையான சுற்றுச்சூழல் அனுமதி (EC) நிபந்தனையைக் குறிப்பிடுகிறது. தற்போதைய வழக்கில், நிலத்தின் நிறுவப்பட்ட வகைப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ சதுப்புநில பெயரிடுதல் எதுவும் இல்லாத நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த நிபந்தனை பொருந்தாது.

கூடுதலாக, 2026 மே 08 அன்று நடைபெற்ற SEIAA கூட்டத்தைத் தொடர்ந்து இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 2026 மே 12 அன்று இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; இதற்கு முன்னதாக பிரிகேட் (Brigade) நிறுவனம் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க எந்தவொரு முன் அறிவிப்போ, விசாரணையோ, கள சரிபார்ப்போ அல்லது வாய்ப்போ வழங்கப்படவில்லை. இத்தகைய நடவடிக்கை நடைமுறை ரீதியாகத் தவறானது, இயற்கை நீதியின் நிறுவப்பட்ட கோட்பாடுகளை மீறுவதாகும், மேலும் செய்யப்பட்ட பெரும் முதலீடுகள், நடந்து வரும் கட்டுமானங்கள் மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பு உரிமைகளையும் அலட்சியப்படுத்துவதாகும்.

முன்மொழியப்பட்ட ராம்சார் தளமும் (Ramsar site) அதன் செல்வாக்கு மண்டலமும் தென் சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, சீவரம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை, வேளச்சேரி, அரசன்கழனி, செம்மஞ்சேரி, காரப்பாக்கம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய கிராமங்கள் முழுவதும் 10,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் மேலும் புரிந்துகொள்கிறோம். இது பல திட்டங்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் பரந்த வளர்ச்சிச் சூழல் அமைப் ஆகியவற்றை பெருமளவில் பாதிக்கும்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அனுமதியை ரத்து செய்ததற்கான அடிப்படை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிரிகேட் குழுமம் தகுந்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை ரீதியிலான தீர்வுகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+