EPFO: பிஎஃப் கணக்கில் இருந்து தானாகவே வங்கி அக்கவுண்டுக்கு டெபாசிட் ஆகும் பணம்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
சென்னை: வருங்கால வைப்பு நிதியினை தொழிலாளர்கள் சிரமம் இன்றி பெறும் வகையில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது யுபிஐ மூலமாகவும் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது செயல்படாமல் உள்ள பிஎஃப் கணக்கில் இருந்து தானாகவே வங்கி அக்கவுண்டிற்கு பணம் டெப்பாசிட் ஆகும் வசதியினை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
இபிஎஃப்ஒ எனப்படும் வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்களின் எதிர்கால சேமிப்பு திட்டமாக உள்ளது. ஊழியர்களின் சம்பள தொகையில் 12 சதவீதம் பிஎஃப் தொகைக்கு பிடித்தம் செய்யப்படும். இதே அளவுள்ள தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் நிறுவனமும் செலுத்த வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி
இந்த பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்படும். ஊழியர்களுக்கான மறைமுக சேமிப்பு திட்டமாக இருப்பதால் இது அவர்களின் ஓய்வு காலத்தில் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும். பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை மருத்துவ செலவுகள், வீடு கட்ட, திருமணம் போன்ற காரணங்களுக்காக குறிப்பிட்ட சதவீதம் எடுத்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள் முடியும். வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதில் தற்போது எளிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தானாகவே வங்கி கணக்கிற்கு டெபாசிட் ஆகும்
யுபிஐ வழியாகவே பணம் எடுக்கும் அளவிற்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில் இருந்த தேவையற்ற சிரமங்களை குறைப்பதாக உள்ளது. இபிஎஃப்ஒ-வில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செய்து வருகிறது.
அந்த வகையில், செயல்படாத பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை, சந்தாதாரர்கள் உரிமை கோராவிட்டாலும் அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த அளவு இருப்பு கொண்ட 7 லட்சம் இபிஎஃப்ஓ கணக்குகளில் உள்ள தொகையை, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு தானாகவே திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை திரும்ப வழங்கும் முக்கிய நடவடிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
தானாகவே வரவு வைக்கும் பணி
இதன்படி, 7 லட்சத்திற்கு அதிகமான செயல் இழந்த கணக்குகளில் உள்ள நிதி, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்துக் கொண்டு நீண்ட காலமாக செயல்பாடு இல்லாத 7.16 லட்சம் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த கணக்குகளில் உள்ள தொகையை சம்பந்தப்பட்ட ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நடைமுறைக்காக சந்தாதரர்கள் எந்த ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியது இல்லை.
31.86 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளது
சந்தாரார்கள் உயிரிழந்து இருந்தால் அவர்களின் வாரிசுகள் அல்லது நாமினிகளுக்கு முறையாக ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஒரு பிஎஃப் கணக்கிற்கு 36 மாதங்கள் பங்களிப்பு வரவில்லை என்றால், அது செயல் இழந்த கணக்கு என்று கருதப்படும்.
வேலை மாற்றம், ஓய்வு அல்லது சிறு தொகை என்பதால் கவனமின்மை ஆகிய காரணங்களால் இவ்வளவு கணக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மொத்தம் 31.86 லட்சம் இபிஎஃப்ஓ கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும் இவற்றில் மொத்தம் ரூ.10,903 கோடி வைப்புத் தொகை உள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்

" title="RRB Group D: ரயில்வே குரூப் டி: 22,195 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் டைம் இருக்கு! மறக்காமல் விண்ணப்பிங்க











Click it and Unblock the Notifications