அடுத்து என்ன செய்யலாம்?.. கிரீன்வேஸ் சாலையில் குவிந்த ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை கோரியும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் ஓபிஎஸ்ஸும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
இந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்த போது இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அதிமுக பொதுக் குழு கட்சி விதிமுறைகளின் படி கூட்டவில்லை என்ற வாதத்தை ஓபிஎஸ் தரப்பு முன் வைத்தது.

அதிமுக பொதுக் குழு
ஆனால் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை மீண்டும் கூட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் 2000 பேர் கடிதம் எழுதியுள்ளார்கள். அதன் அடிப்படையில்தான் பொதுக் குழு கூட்டம் கூடியது என எடப்பாடி தரப்பு தன் வாதத்தில் முன் வைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் விதிகள் மீறியிருந்தால் இந்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிபதி ஜெயசந்திரன் கூறியிருந்தார்.

இன்று தீர்ப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகிறது. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தீர்ப்புதான் இரு தலைவர்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் என்பதால் இத்தனை எதிர்பார்ப்புகள் உள்ளன.

பாதகம்
இந்த வழக்கில் தமக்கு பாதகமாக வந்தால் என்ன செய்வது, சாதகமாக வந்தால் என்ன செய்வது என்பது குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடலாமா என்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பரபரக்கும் சாலை
அது போல் தீர்ப்பு பாதகமாக வந்தால் அடுத்தது என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைகள் பரபரக்கின்றன. நீண்ட நாளுக்கு பிறகு கிரீன்வேஸ் சாலையில் தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பட்டாசு, இனிப்புகளை இரு தரப்பினரும் வாங்கி வைத்து காத்துக் கிடக்கிறார்கள்.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications