Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? - பதில் அளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகர், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

EPS Dodges Question on Rajya Sabha Seat for DMDK

ராஜ்யசபா வேட்பாளர்கள்

வரும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு ராஜ்யசபா இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்.

திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் கூட்டணிக் கட்சியான மநீம சார்பில் நடிகர் கமல்ஹாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

சீட் கேட்கும் தேமுதிக

அப்போது, ஒரு இடத்தை தேமுதிக கட்சிக்குக் கொடுத்து அக்கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என பேசப்பட்டுள்ளது. அதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பும் ஒரு பிரிவினர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து தேமு​திக போட்​டி​யிட்​டது. அந்த கூட்​ட​ணி​யில் 5 இடங்​கள் தேமு​தி​க​வுக்கு வழங்​கப்​பட்​டன. ஒரு மாநிலங்​களவை இடமும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தாக தேமு​திக தரப்​பில் கூறப்​பட்​டது. ஆனால், 'தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை'' என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

எடப்பாடியை சந்தித்த சுதீஷ்

ஏற்கனவே உறுதி அளித்​த​படி தங்​களுக்கு மாநிலங்களவை சீட்டை அதி​முக வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமியை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தேமு​திக பொருளாளர் எல்​.கே.சு​தீஷ் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிட விரும்​புவ​தாக​வும், தற்​போது மாநிலங்​களவை தேர்​தலில் தங்​களுக்கு ஒரு சீட் வழங்க வேண்​டும் எனவும் சுதீஷ் பேசியதாக கூறப்​படு​கிறது. அதற்கு கட்சி நிர்வாகி​களு​டன் ஆலோ​சித்து பதில் அளிப்​ப​தாக அதி​முக தரப்​பில் தெரிவிக்கப்பட்​ட​தாக​ தகவல்​கள்​ தெரிவிக்கின்றன.

பதில் சொல்ல மறுத்த எடப்பாடி

தேமுதிகவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் வழங்கினால் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்றோ, நாளையோ இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அங்கிருந்து கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+