Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் கோயிலில் பாரம்பரிய தரிசன வழியை மூடி ரூ.200 கட்டண வசூல்? திமுக அரசை விளாசிய எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு வழிகள் அடைக்கப்பட்டு 200 ரூபாய் கட்டண வழியை பயன்படுத்த வேண்டும் என்று அறநிலையத் துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வழியை அறநிலையத்துறை மூடியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. 200 ரூபாய் தரிசன கட்டணம் செலுத்தினால் மட்டுமே இனி அந்த வழியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Rameshwaram Temple edappadi palaniswami

இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது உள்ளூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் செயல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், உள்ளூர் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தும் இந்த கட்டண உயர்வு நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு செலவை ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ. 200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தி இருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

மேலும், பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத் தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+