ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக, நாதக தவிர 11 'அரசியல் கட்சிகள்' போட்டியிடுகின்றன தெரியுமா?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தவிர மேலும் 11 'பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின்' வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக 33 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் 3 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சியவர்களில் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 47 பேர் களத்தில் இருந்தனர். இந்த 47 பேரில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் பத்மாவதியின் வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர். இவர்களில் 13 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; 33 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.
திமுக, நாம் தமிழர் கட்சி தவிர்த்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்:
- பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி
- மறுமலர்ச்சி ஜனதா கட்சி
- நாடாளும் மக்கள் கட்சி
- சாமானிய மக்கள் நலக் கட்சி
- தேசிய மக்கள் சக்தி கட்சி
- சமாஜ்வாதி கட்சி
- இந்திய கண சங்கம் கட்சி
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்
- வீரோ கி விர் இந்தியன் கட்சி
- தாக்கம் கட்சி
- அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி












Click it and Unblock the Notifications