ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை கொடுக்கும் கமல்ஹாசன்..3 நாட்கள் அனல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார் கமல்ஹாசன்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார். பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம்தமிழர் கட்சியினர் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு திரட்டினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகமான ஆழ்வார்போட்டையில் நேரில் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தங்களின் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் அழைத்திருக்கிறோம் என்றும் இளங்கோவன் கூறினார்.
இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார் எனது நண்பரும் பெரியாரின் பேரனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிக்குழுவையும் கமல்ஹாசன் அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. திமுகவின் 11 அமைச்சர்களை உள்ளடக்கிய பெரும் படையே களமிறங்கி உள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசன் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் கடந்த சட்டசபை தேர்தலில் தனி அணியாக சரத்குமாருடன் இணைந்து களமிறங்கினார் கமல்ஹாசன். முதல் முறையாக தேசிய கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யப்போகிறார். 2024 லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலில் கூட்டணியை மாற்றி களமிறங்குகிறார் கமல்ஹாசன். கமல்ஹாசன் பிரச்சாரம் கைகொடுக்குமா பார்க்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications