குரூப் 4 போட்டி தேர்வு! 10,000 பத்தாது! 25,000 காலிபணியிடங்களை நிரப்பணும்! கொங்கு ஈஸ்வரன் டிமாண்ட்!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித்தேர்வு மூலம் 25,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
காலிப்பணியிடங்கள் தான் அரசு அலுவலகங்களில் பல பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதற்கு காரணமே என அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை வருமாறு;

ஒவ்வொரு முறை குரூப் தேர்வு நடைபெறும் போது சில ஆயிரம் காலி பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கானவர்கள் போட்டித் தேர்வு எழுதுவது நாம் கண்கூடாக பார்ப்பது ஒன்று. பல ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுடன் அரசு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் போட்டித் தேர்வுகளில் பயிற்சி மேற்கொண்டும், போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டும் வருகின்றனர்.
அரசு ஒவ்வொரு போட்டி தேர்வு நடத்துவதற்கு முன்னரும் பின்னரும் பல முன்னேற்பாடுகளை செய்து பல கட்டங்களை தாண்டி காலி பணியிடத்தை நிரப்ப வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை போட்டி தேர்வு நடத்துவதற்கும் தனித்தனியாக நிதி செலவும், தனித்தனியான நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டி உள்ளது.
தற்பொழுது வெளிவந்துள்ள குருப் 4 போட்டி தேர்வு முடிவு இருக்கும் காலியிடங்களை பார்க்கும் போது மிகவும் சொற்பமான அளவே உள்ளது. இந்தப் போட்டி தேர்வு அறிவிப்பு செய்த போது இருந்த சூழலுக்கும் தற்பொழுது உள்ள சூழலுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது கொரோனா தொற்றுக்குப் பிறகு மற்றும் அந்த கொரோனா காலத்தில் இறந்த அரசு பணியாளர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இடைநீக்கம் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்களால் பல காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளது.
இதுவே அரசு நிர்வாகத்தில் பல அலுவலகங்களில் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்போது காலி பணி இடங்கள் கணக்கீடு செய்து கூடுதல் பணி இடங்கள் நிரப்பபடாமல் விட்டுவிட்டு அரசு மீண்டும் ஒருமுறை போட்டி தேர்வு அறிவிப்பு செய்து அதை நடைமுறைப்படுத்தி தேர்வு வினாத்தாள் தாயாரிப்பு, விடைத்தாள்கள் மதிப்பீடு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தி மீண்டும் ஒருமுறை பணியாளர் தேர்வு செய்வதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கூட ஆகலாம்.

அதுவரை தற்போது இருக்கும் காலி பணியிடங்கள் தொடர்வதற்கு அரசு எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது. அவ்வாறு காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதை அரசு அனுமதித்தால் அரசு மக்களுக்கு கொண்டு செல்லும் பல நல திட்டங்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேராமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
தற்போது உள்ள கூடுதல் காலிப் பணியிடங்களை மீண்டும் கணக்கீடு செய்து கூடுதல் பணியிடங்கள் சுமார் 25,000 ஏற்படுத்தியும், இனிவரும் காலத்தில் அரசு பணியாளர்கள் பணி சுமையை குறைக்க தேர்வு நடத்தி தேர்வு முடிவு வெளியிடும்போதே குறிப்பிட்ட சதவீதத்தினரை ரிசர்வ் பணியிடங்கள் ஏற்படுத்தி வைக்கவும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications