Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கும் ஒரு காதல் இருந்தது.. எதிர்நீச்சல் மாரிமுத்து சொன்ன பிளாஷ் பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரிமுத்து என்பதை விட எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் என்றால் அனைவருக்குமே தெரியும். இந்தாம்மா ஏய் என்று அதட்டலுடன் பேசுவது இல்லத்தரசிகளுக்கு பிடித்து போனது. மாரிமுத்து இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதே மரணமடைந்துள்ளார் மாரிமுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

மருமகள்களைப் பார்த்து ஏம்மா ஏய் என்று அதட்டும் போதும் சரி..மதுரை மீனாட்சி என்று வணங்கும் போதும் சரி அல்டிமேட் நடிப்புதான். அவருக்குள் இருக்கும் மென்மையான காதல் பக்கங்களை வெளிப்படுத்தியது அந்த மினி பேட்டி. இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது புகழ் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

Ethir Neechal Serial Marimuthi is no more Flash back interview

கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் டிவி சீரியலில் தனது மருமகள்களை அவர் அழைக்கும் தொனியே அலாதியானது. "இந்தாம்மா ஏய்".. என்று ஒரு அதட்டலில் எல்லோரையும் நடுங்க வைத்து விடுவார்.

நான் அடிக்கடி யூஸ் செய்யும் வார்த்தை இந்தாம்மா..தான் வேறென்ன? இந்தாம்மா ஏய் என்று சொன்னாலே சும்மா அதிருதே. கோபம்தான் என்னோட பலம், பலவீனம். புடிச்ச பாட்டு பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா..முதல் மரியாதை பட பாடல் என்று கூறியிருந்தார் மாரிமுத்து.

எனக்கு பெரிய அளவில் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் பெண்களை கடவுளாக மதிப்பவன் நான் என்று சொன்ன மாரிமுத்து சீரியலில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.. மதுரை மீனாட்சி எல்லாம் நீதான் பார்த்துக்கம்மா என்று கும்பிடுவார்.

முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, காலை முதல் மாலை வரை மண் அள்ளி போட்டு ரூ.4.50 சம்பளம் வாங்கினேன். மன நிறைவை கொடுத்தது. அந்த சம்பளத்தை முதன் முதலாக வாங்கும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

காலையில் எழுந்த உடன் சோஷியல் மீடியாவில் நம்மைப்பற்றி ஏதாவது வந்திருக்கா என்று பார்ப்பேன் அப்போதுதான் அந்த நாள் நல்லாயிருக்கும் என்று சொன்னவர் மாரிமுத்து. இன்றைக்கு சோசியல் மீடியா முழுக்க அவரது மரணத்திற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படங்களில் நான் செய்த கதாபாத்திரங்களில் கொம்பன், பரியேறும் பெருமாள் பட கதாபாத்திரங்கள் பிடிக்கும். எல்லாத்தையும் விட இப்போ ரொம்ப பிடிச்சது ஆதி குணசேகரன்தான் என்று சொன்ன மாரிமுத்து டப்பிங் பேசும் போதே மரணமடைந்து விட்டார்.

காதல் பற்றி பேசிய மாரிமுத்து, கல்லூரி காலத்தில் எனக்கும் ஒரு காதல் இருந்தது. எல்லோரையும் போலத்தான். காதலை கிராஸ் பண்ணாமல் யாரும் வரமுடியாது. என்னை காதலித்தவருக்கு நான் காதல் கடிதம் கொடுத்தேன். எனக்கும் அவர் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார். ரொம்ப நாட்கள் அந்த காதல் கடிதத்தை வைத்திருந்தேன். காலப்போக்கில் அந்த காதல் கடிதம் காணாமல் போய் விட்டது என்று வருத்தத்துடனே சொன்னார் குணசேகரன். முரட்டு இதயத்திற்குள் மென்மையான காதல் இருந்ததை வெளிப்படுத்திய மாரிமுத்து இன்றைய தினம் நம்மிடையே இல்லை என்பது வருத்தமான விசயம்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+