முரளிதரன் படம்...நன்றி வணக்கம்னா.. நன்றி வணக்கம்னு அர்த்தம்.. நக்கலாக பதிலளித்த விஜய்சேதுபதி!
சென்னை: முத்தையா முரளிதரன் பட விவகாரம் குறித்து தாம் நன்றி வணக்கம் என ட்வீட் போட்டதற்கு எல்லாம் முடிந்து போனதாக அர்த்தம் என நடிகர் விஜய்சேதுபதி நக்கலாக பேட்டியளித்துள்ளார்.
ஈழத் தமிழரின் உணர்வுகளை கொச்சைபடுத்தியவர் முத்தையா முரளிதரன் என்பது உலகத் தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு. அத்தகைய முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என உலகத் தமிழர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதுபற்றி விஜய்சேதுபதி எதுவும் சொல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ள வேண்டும் என்று முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ட்விட்டரில் நன்றி வணக்கம்
இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டிருந்தார். முத்தையா முரளிதரன் படத்தில் தாம் விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் பூடகமாகவே விஜய்சேதுபதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு
இந்த நிலையில் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார் நடிகர் விஜய்சேதுபதி. முதல்வரின் தாயார் மறைந்த தவுசாயம்மாள் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் கூறினார் விஜய்சேதுபதி.

நக்கலான பதில்
அப்போது விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள், நன்றி வணக்கம் என ட்வீட் போட்டுள்ளதற்கு என்ன அர்த்தம்? படத்தை கைவிட்டுவிட்டீர்களா? விலகிட்டீங்கன்னு எடுத்துக்கலாமா? என கேள்விகள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு, நன்றி வணக்கம்னு அர்த்தம் என நக்கலாக பதில் சொன்னார் விஜய் சேதுபதி. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாம் முடிந்து போனது என அர்த்தம். இனி அதைப்பற்றி பேசவேண்டாம் என்று கூறினார்.

வேண்டா வெறுப்பாக விலகலா?
விஜய் சேதுபதியின் இந்த பதில் தொனியானது பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஈழத் தமிழர்கள் கோரிக்கை விடுத்த போதும் முத்தையா முரளிதரனே சொன்னதால் வேண்டா வெறுப்பாக படத்தில் இருந்து விலகியதாகவே இருந்தது. இந்த போக்கைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications