கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?
சென்னை: தமிழக அரசியலில் கட்சி தாவல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கர் குறித்து புதிய தகவல் அவரது ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது . அதிமுகவில் இருந்து விலகும் அவர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. தவெக விஜயபாஸ்கருக்கு சிக்னல் கொடுக்காத நிலையில், ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணையவுள்ளார் என்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத சூழலில், முக்கிய தலைவர்கள் பலர் மாற்று கட்சிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில் தற்போது சி.விஜயபாஸ்கரின் பெயரும் அடிபடுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து குரல் கொடுத்த முக்கிய தலைவர்களில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர்.
அதிமுக
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது அப்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்குப் பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் அவர் வகித்து வந்த கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு, புதிய மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டார்.
சி விஜயபாஸ்கர்
இது விஜயபாஸ்கரின் அதிருப்தியை மேலும் அதிகரித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவில் தனது எதிர்காலம் குறித்து குழப்பம் நிலவிய நிலையில், மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து அவர் ஆலோசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாமா என்ற யோசனையும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அந்தக் கட்சியில் இணைந்துள்ளதால், விஜயபாஸ்கரும் இதனை யோசித்தார்.
தவெக
ஆனால் அந்த முடிவில் இருந்து தற்போது அவர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியில் இணைந்தால் தனது அரசியல் அனுபவத்திற்கு ஏற்ற இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில ஊழல் புகார்களால் தவெகவும் சி.விஜயபாஸ்கரை சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டியது. அதன்பிறகு, பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கம் குறித்தும் விஜயபாஸ்கர் ஆர்வம் காட்டினார்.
திமுக தலைமை
அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் அந்த இயக்கம் இன்னும் முழுமையான அரசியல் கட்சியாக மாறாத சூழலில் உடனடியாக அங்கு செல்வது சரியான முடிவாக இருக்காது என்று அவரது நெருங்கியவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையுடன் கடந்த சில வாரங்களாக மறைமுக பேச்சுகள் நடைபெற்றதாகவும், தற்போது அது சாதகமாக முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தாவல்
விஜயபாஸ்கர் திமுகவில் இணையலாம் என்ற தகவல் வெளியான உடனே புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர் கட்சிக்குள் வந்தால் தங்கள் அதிகாரம் போகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கரின் வருகை திமுகவிற்கு பலம் சேர்க்கும் என்று கட்சியின் 'தலைமை' கருதியதாக கூறப்படுகிறது.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அவருக்கு உள்ள தனிப்பட்ட ஆதரவு, பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற அனுபவம், கள அரசியலில் உள்ள திறமை ஆகியவை திமுக தலைமையை ஈர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் திமுகவில் இணைந்ததும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
அண்ணா அறிவாலயம்
இதற்கிடையில், விராலிமலை தொகுதியில் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று வந்த விஜயபாஸ்கர், தற்போது தனது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கத் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications