கொரோனாவை விரட்ட.. 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்.. பீலா ராஜேஷ் பொறுப்பில் கிருஷ்ணகிரி
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜெ ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சில நாட்கள் கழித்து தமிழகத்தில் நாள்தோறும் 1500-க்கு மேல் கொரோனா கேஸ்கள் வந்தன.
இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷிற்கு பதிலாக அத்துறை செயலாளராக ஜெ ராதாகிருஷ்ணனே மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீலா ராஜேஷ் வணிக வரித் துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

4 மாவட்டங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

அரியலூர்
கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் அரியலூர் மாவட்ட அதிகாரியாக சரவணவேல்ராஜ், பெரம்பலூருக்கு அனில் மேஷ்ராம், கோவை மாவட்ட சிறப்பு அதிகாரியாக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட அதிகாரியாக சுப்ரியா சாஹூ, கடலூர் மாவட்ட அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி, தருமபுரிக்கு சந்தோஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
திண்டுக்கல் மாவட்ட அதிகாரியாக மன்கத் ராம்சர்மா, ஈரோடு மாவட்ட அதிகாரியாக உஷா, குமரி மாவட்ட அதிகாரியாக ஜோதி, கரூர் மாவட்ட அதிகாரியாக விஜயராஜ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். திருச்ச மாவட்ட அதிகாரியாக ரீட்டா ஹரீஷ் தாக்கர், மதுரை மாவட்ட அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை ஷம்பு கல்லோலிகர், தஞ்சை மாவட்ட அதிகாரியாக பிரதீப் யாதவ், நாமக்கல் மாவட்ட அதிகாரியாக தயானந்த் கட்டாரியா, சேலம்- நஜிமுதீன், விருதுநகர் மாவட்ட அதிகாரியாக மதுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திருவாரூர்
தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக குமார் ஜெயந்த், நாகை மாவட்ட அதிகாரியாக முனியநாதன், ராமநாதபுரம் மாவட்ட அதிகாரியாக சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட அதிகாரியாக மகேஷ், திருவாரூர் மாவட்ட அதிகாரியாக மணிவாசன், தேனி மாவட்ட அதிகாரியாக கார்த்திக், திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியாக தீரஜ்குமார், நெல்லை மாவட்ட அதிகாரியாக செல்வி அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஸ்டாலின்
திருப்பூர் மாவட்ட அதிகாரியாக கோபால், வேலூர் மாவட்ட அதிகாரியாக ராஜேஷ் லக்கானி, விழுப்புரம் மாவட்ட அதிகிராயாக முருகானந்தம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குழுவுக்கு மேல் குழு அமைக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் மீண்டும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications