தமிழகத்தில் திமுகவுக்கே வெற்றி.. எழுச்சிக்கு காரணம் இதுதானா?
Recommended Video
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழகத்தின் இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்ட அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

அசைக்க முடியா சக்திகள்
அவரை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மரணமடைந்தார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகள் என்பதை மறுக்கமுடியாது.

பாஜக அரசை சார்ந்து
தலைவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, பாஜக அரசை சார்ந்தே செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

பாஜகவுக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் கெய்ல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை போன்ற மத்திய அரசின் திட்டங்களால் பாஜகவுக்கு பெயரும் செல்வாக்கும் இல்லாத நிலை இருந்தது. சொல்லப்போனால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்ப்புதான் இருந்தது.

அதிமுகவுக்கு சரிவு
இந்நிலையில்தான் அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இருந்து இந்த நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொண்டது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளாததே அதிமுக சரிவை சந்திக்க காரணம் என கூறப்படுகிறது.

கடைசி நேர சலசலப்பு
அதேநேரத்தில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவும் திமுக மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் பாமகவில் ஏற்பட்ட சலசலப்பும் திமுக அதிக இடங்களை கைப்பற்ற வழியாக அமைந்ததாக கூறப்படுகிறது.

அமமுக, மநீம
மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளும் அதிமுக வாக்குகளை பிரித்ததும் அதிமுக சரிவை சந்திக்கவும் திமுக எழுச்சியை சந்திக்கவும் காரணமாக அமைந்ததாக கருதப்படுகிறது.

வாரி வேட்பாளர்கள்
மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தெரிந்த முகம். திமுக சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் என்பதும் திமுக அதிக இடங்களை கைப்பற்ற காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரணங்கள் அனைத்தும் கருத்துக்கணிப்புடன் பொய்யாகிப்போகிறதா அல்லது மெய்யாகுமா என்பது 23ஆம் தேதி தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications