காற்று வீசுகிறது.. மேகம் நகர்கிறது.. சிறந்த மூன்று நாட்கள் இதுதான்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
தமிழகத்தில் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் இதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் இதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடாது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடார்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வரிசையாக நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் ஆகி வருகிரது.

காற்று எப்படி
தற்போது 30 நாட்ஸ் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இந்த காற்று வீசி வருகிறது. அதனால் சென்னையை நோக்கி மேலும் காற்று வரும். தமிழகத்தை நோக்கி மேலும் அதிகமாக காற்று வரும். இது நிறைய மேகத்தை கொண்டு வரும்.

என்ன மேகம்
இதனால் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்று காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். எல்லாம் சரியாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்
அவர் தனது இன்னொரு போஸ்டில் எதுவும் மாறவில்லை. சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு இப்படியேதான் இருக்கும். அதேபோல் தென் தமிழகம், டெல்டா பகுதிகளை நோக்கியும் மழை நகர்ந்து வருகிறது.

3 நாட்கள்
பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் ஆகும் இது. இன்று காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நோக்கி மேகங்கள் நகரும். இதனால் இரவிற்கு பின்பும், அதிகாலையிலும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications