ஆதார் கார்டு ரெடியா? கட்டணமின்றி ஆதார் அட்டை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. இல்லாட்டி ரூ.50 ஃபைன்
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.. ஆதார் புதுப்பிப்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றையும் ஆதார் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது..
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது... அந்தவகையில், இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.. அந்த அளவுக்கு அனைவருக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது..

ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களையும், சேவைகளையும் பெற முடியும்..எனவேதான், 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இதுவரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டே வருகிறார்கள்.
ஆதார் கார்டுகள்: ஆதார் தொடர்பான மோசடி தடுப்பு, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்திருந்தது.. அதன்படி, ஆதார் அட்டைகளை, பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
அந்தவகையில், இப்போதும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, போட்டோ போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்: https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர்.
ஆனால் பலரும் புதுப்பித்துவிட்ட நிலையில், இன்னும் 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்று ஆதார் ஆணையம் கூறியிருக்கிறது.. அதனால், வருகிற செப்டம்பர் 14-ந் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசத்தையும் தற்போது வழங்கி உள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அதற்குள் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் புதுப்பிக்க முடியும் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆவணங்கள்: செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், myAadhaar என்ற ஆதார் போர்ட்டலுக்குள் நுழைந்து ரூ.25 அல்லது இயற்பியல் ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்..
இதற்கு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், ரேஷன் கார்டு, முகவரி சான்று, போன்றவை தேவைப்படும். அதேபோல, வங்கி பாஸ்புக், கேஸ் சிலிண்டர் பில், பாஸ்போர்ட், திருமணச் சான்றிதழ், ரேஷன் கார்டு, சொத்து வரி ரசீது இப்படி ஏதாவது ஆவணம் தேவைப்படும்..
எப்படி புதுப்பிப்பது:
myAadhaar என்ற போர்ட்டலுக்கு சென்று, Enter Option ஐ- கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீடுகளை உங்களது OTPஐ பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
ஆவண புதுப்பிப்பு (Document Update) என்ற ஆப்சனை கிளிக் செய்து, நெக்ஸ்ட் (Next) ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
"மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் சரிபார்க்கிறேன்" (I verify that the above details are correct) என்ற கட்டத்தை கிளிக் செய்து, மீண்டும் "நெக்ஸ்ட்" ஆப்சனை கிளிக் செய்யவும்.
அடையாள சான்று (ID Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) ஆகியவற்றிற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து "சமர்ப்பி" (Submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும்.. இதற்கு பிறகு, அப்டேட் செய்யப்பட்ட உங்கள் ஆதார் அட்டை ஒரு வாரத்துக்குள் புதுப்பிக்கப்படும்.
ரூ.50 கட்டணம்: கட்டணமின்றி ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தாலும், 50 ரூபாய் கட்டணம் செலுத்தும்படி ஆகிவிடுகிறதாம்.. ஆதாரை புதுப்பிக்க வெப்சைட்டில் ஒவ்வொரு படிகளாக செய்து கொண்டே போகும்போது, கடைசியில் 50 ரூபாய் கேட்பதாகவும், பலரும் இந்த கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
வழக்கமாக, காலகெடுவுக்கு பிறகு ஆதார் புதுப்பிப்பவர்களுக்குதான், இப்படி ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டிவரும். ஆனால், கால அவகாசத்துக்கு முன்கூட்டியே 50 ரூபாய் கட்டணத்தை செலுத்துவதாக ஆங்காங்கே தகல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications