அமாவாசைக்கு பிறகு வரும் 3ஆவது முகூர்த்த நாள்! பத்திரப் பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
சென்னை: முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கான பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதும் ஆன்லைன் முறையில் உட்செலுத்த வேண்டும். இதில் ஆரம்ப கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் பதிவுக்கான நேரம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

அந்த நேரத்துடன் வரிசை எண் அடங்கிய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி 100 டோக்கன்களும் அதிக பத்திரங்கள் பதிவாகும் இடங்களில் 200 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
முகூர்த்த நாட்களில் மக்கள் அதிக எண்ணிக்கை பத்திரப் பதிவுக்கு வருகை தருவர் என்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயமாகும். இதை கருத்தில் கொண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் கூடுதலாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று முகூர்த்த தினம் என்பதால் கூடுதலாக டோக்கன்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சார் பதிவாளர் இருக்கும் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டும். அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் 12 தட்கல் முன் பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும். இதற்கான உத்தரவை பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.
கடந்த முறை ஆடி 18 இன் போதும் டோக்கன்கள் அதிக அளவு வழங்கப்பட்டது. அன்று செய்யும் காரியங்கள் பெருகும் என்பதால் மக்கள் இது போன்று ஒரு நல்ல நாட்களில் புது விஷயங்களை செய்து வருகிறார்கள். அது போல் ஆவணி மாதத்திலும் முகூர்த்த தினத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அது போல் இந்த கார்த்திகை மாதத்தில் இன்று 2 ஆவது முகூர்த்த நாள், அமாவாசைக்கு பிறகு 3 ஆவது முகூர்த்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications