Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீடு.. லீஸுக்கு பணமும் தரல.. பெருகும் போலி ஆவணம், மோசடி பத்திரம்.. யாரிந்த வக்கீல்? கோர்ட் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் சொத்துக்கள் குறித்து நீதிமன்றங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் மோசடி வழக்கு ஒன்றில் முக்கிய உத்தரவினை ஹைகோர்ட் இன்று பிறப்பித்திருக்கிறது.

வீட்டு மனை, நிலம் வாங்கும்போது தாய்ப்பத்திரம், ஒரிஜினல் இருக்கிறதா என்பதையெல்லாம் சரியாக கவனித்து வாங்க வேண்டியிருக்கிறது.. காலி மனையாக இருப்பின், அந்த காலி மனைக்கு சிஎம்டிஏவின் Approval இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.. சின்ன சந்தேகங்கள் எழுந்தாலும், உங்கள் ஊரிலுள்ள கிராம நிர்வாகியின் ஆலோசனையையும் பெற்றே செய்ய வேண்டியிருக்கிறது.

fake documents lease house

இவ்வளவ பார்த்து பார்த்து சொத்தை வாங்கினாலும் முறைகேடுகள் ஏதாவது ஒரு ரூபத்தில் நடந்துவிடுகின்றன.. தமிழக பத்திரப்பதிவு துறையானது, இந்த முறைகேடுகளை களைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காலி மனை பத்திரம்: எனினும், போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதற்காகவே, பத்திரப்பதிவில் இணையதள வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. காலி மனை பத்திரங்கள் பதிய நில புகைப்படம் கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது..பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பணத்தை பெற்றுக் கொண்டு, போலி ஆணம் தயாரிக்கும் ஆவண எழுத்தர்கள் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.

இவை அனைத்தையும்விட, போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் சொத்துக்கள் குறித்து நீதிமன்றங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், இபபோதும்கூட வழக்கு ஒன்றில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த மாதவன் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்..

பார் கவுன்சில்: அந்த மனுவில், "நந்தனம் சிஐடி நகரில் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் அமர்நாத் என்ற வழக்கறிஞர், வீடு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்த பின் வீட்டை காலி செய்து கொடுக்காமல் மற்ற வீடுகளையும் அபகரித்து வாடகை எதுவும் கொடுக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை" என்று மனுவில் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு, "வழக்கறிஞர் அமர்நாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வீடு குத்தகைகான ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கும், தடய அறிவியல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

ஒப்பந்த காலம்: இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு வாடகை ஏதும் கொடுக்காமல் மாதவனின் வீட்டை வழக்கறிஞர் அமர்நாத் அபகரித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதே போல், வழக்கறிஞர் அமர்நாத், நீதிமன்றத்தில் வழங்கிய வீடு குத்தகை எடுத்ததற்கான ஆவணம், அதில் இருந்த கையெழுத்து என அனைத்தும் போலியானது என தெரிய வந்ததாக தடய அறிவியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

24 மணி நேரம் டைம்: இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கறிஞர் அமர்நாத் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு பார் கவுன்சிலும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் வீட்டை 48 மணி நேரத்தில் அமர்நாத்திடம் இருந்து மீட்டு வீட்டின் உரிமையாளர் மாதவன் வசம் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+