ரஞ்சனா நாச்சியாரை காப்பாற்ற இப்படியா.. போலீசிடம் நாடகமாடிய குடும்பம்? கைதுக்கு முன் என்ன நடந்தது
சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறங்கும்படி திட்டி தாக்கியதாக வீடியோ பரவிய நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் இன்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வேளையில் வீட்டுக்கு சென்ற போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் நாடகமாடிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று குன்றத்தூரில் இருந்து போரூருக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏராளமான மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதை பார்த்த ரஞ்சனா நாச்சியார் அந்த பஸ்சை நிறுத்தினார். அதன்பிறகு அவர் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பஸ் கண்டக்டர், டிரைவரை அவர் திட்டினார்.
அதோடு பஸ்சில் பயணித்த பிற பயணிகளை பார்த்து, ‛மாணவர்கள் இப்படி பயணிப்பதை கண்டிக்க கூடாதா'' என சாடினார். அதோடு பின்பக்க படிக்கட்டில் தொங்கிய சில மாணவர்களை வலுக்கட்டாயமாக அடித்து வேகமாக இறங்க வைத்தார். அதோடு ஒருமையில் திட்டினார். மேலும் அவர் அறிவு இருக்கா நாயே எனவும் அங்கிருந்தவர்களை திட்டினார். அதோடு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. அதாவது படியில் பயணித்த மாணவர்களை பாதுகாக்க அவர் இப்படி செய்திருந்தாலும் கூட அவர் பயன்படுத்திய வார்த்தை மற்றும் மாணவர்களை அடித்தது தவறு என பலரும் கூறினர்.
இதற்கிடையே தான் சம்பவம் குறித்த பஸ் கண்டக்டர் நடராஜன் மாங்காடு போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை ஆபாசமாக திட்டுதல், அரசு பஸ்சை மறித்தல், தாக்குதல் நடத்தியது உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வேளையில் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எப்ஐஆர் காட்டுங்கள், பிடிவாரண்ட் காட்டுங்கள் என அவர் போலீசாரிடம் கேட்டார். மேலும் தனது சொந்த காரில் போலீஸ் நிலையம் வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் போலீசார் அவரிடம் நைசாக பேசி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதற்கிடையே தான் இன்று காலையில் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய போலீசார் சென்றபோது அவரது குடும்பத்தினர் நாடகமாடியது தெரியவந்துள்ளது. ரஞ்சனா நாச்சியாரை கைது நடவடிக்கையில் இருந்து தடுக்கும் வகையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது காலையில் போலீசார் ரஞ்சனா நாச்சியார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
போலீசாரை பார்த்தவுடன் அவரது குடும்பத்தினர் கைது நடவடிக்கைக்காக தான் வந்துள்ளனர் என்பதை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இருக்கிறாரா? என போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு குடும்பத்தினர் இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இருப்பதை அறிந்தே சென்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் பேச்சை நம்பவில்லை. மாறாக வீட்டில் இருந்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா?












Click it and Unblock the Notifications