தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன்
சென்னை: திருவான்மியூர் டு உத்தண்டி மேம்பாலத்தை ரூபாய் 1400 கோடி ரூபாயில் கட்ட வேண்டியதை ஒப்பந்ததாரர்களை மிரட்டி 2100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். ஜனநாயகன் வெளியீடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.. ராமதாஸ் நாளை தர்மபுரியில் தனது மருமகள் சௌமியாவுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி போக தெரியும் என குறிப்பிட்டார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும் சி. ஏழுமலையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவர், போளூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சிலை அருகே பாஜக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அப்புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார்...

அப்போது பேசி அன்புணி, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எதிரான மிகப்பெரிய பேரலை உருவாகி உள்ள, இன்னும் பத்து தினங்களில் அது சுனாமியாக மாறும் எனவும், மக்களின் முழு ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது குறைந்தது 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என்பது எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் உண்டான தேர்தல் எனவும், மோடி மீது ஏன் ஸ்டாலினுக்கு பயம் என கேள்வி எழுப்பினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கை இல்லை திராவிட மாடல் ஐந்தாண்டு கால ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை.. ஆனால் தற்போது திமுக 8,000 ரூபாய் டோக்கன் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு தனது அதிகாரம் செல்வாக்கும் குறையும் என்பதற்காக பிரிக்கப்படாமல் உள்ளது, ஹிட்லரை விட மோசமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளார்.
உத்தண்டி டு திருவான்மியூர் மேம்பாலம் 1400 கோடி ரூபாயில் கட்டப்பட்டு அதனை 2,100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தாரை மிரட்டுவதாக குற்றம் சாட்டிய அவர், மாவட்டத்தின் அமைச்சர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு வயது என மாற்றி மாற்றி வேட்பு மனுவில் குறிப்பிட்ட மோசடி செய்துள்ளது.
முதலமைச்சரின் கிச்சன் கேபினட்டில் நெருக்கமான அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, கே என் நேரு, செந்தில் பாலாஜி இவர்கள் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான குற்றம், வேலை வாய்ப்பு இல்லா திண்டாட்டம், வருவாய்த்துறை, தூய்மை காவலர் மற்றும் அரசு அதிகாரி உள்ளிட்டவர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலையில் தான் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு குறித்தும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 100% போதைப்பொருள் மற்றும் கஞ்சாவால்தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 62,000 குழந்தைகள் மீது குற்றங்கள் நடைபெற்று உள்ளது. அதில் 27 ஆயிரம் குற்றங்கள் போக்சோ 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 38 பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் 44 ஆயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி கொடுங்கால் ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
ஜனநாயகம் திரைப்படம் தேர்தலுக்காக வேண்டுமென்று திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு ஜனநாயக நாடு என்றும் தேர்தல் என்பது அனைவருக்கும் பொதுவானது எனவே விஜய்க்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறிர்.
ராமதாஸ் நாளை தர்மபுரியில் தனது மருமகள் சௌமியாவுக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி போக தெரியும் என்று கூறினார்.
-
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications