தந்தையர் தினம் 2020 : மாபெரும் மனிதர் அப்பா நீங்கள்.. லவ் யூ டாடி!
சென்னை: தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. இது முதுமொழி.. இன்று வரை தாய்க்கு நிகராக போற்றப்படும் அன்பு உள்ளம் தந்தை மட்டுமே.
நமது வாசகர் ஜெசிந்தா சந்திரிகா. தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார். அங்குள்ள வங்கியில் ஐடி பிரிவில் பணியாற்றுகிறார். இவரது அப்பா தாம்சன் செல்வராஜ். அப்பா என்றால் ஜெசிந்தாவுக்கு உயிர். தந்தை மீது அத்தனை பாசம்.. அந்த பாசத்துக்குரிய தந்தை கடந்த 2019ம் ஆண்டு ஜெசிந்தாவை விட்டு மறைந்தார். இந்த உலகை விட்டுப் போனாலும் கூட ஜெசிந்தாவின் இதயத்தில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறார் அந்த அன்புள்ள அப்பா.
தனது தந்தை குறித்த நினைவுகளை நம்முடன் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெசிந்தா.. நீங்களும் படியுங்கள்.
தந்தையர் தினம் 2020 : புத்தனாவது சுலபம்.. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்!
சொர்க்கத்தில் இருக்கும் அப்பா.. உங்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துகள்.
அப்பா இப்போது இல்லை.. ஆனாலும் நீங்கள் எப்போதும் எனது இதயத்தில் நிரந்தரமாக இருக்கிறீர்கள்..
எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அற்புதம் நீங்கள்..
மகளின் படிப்புக்காக அப்பாக்கள் செலவிடுவார்கள்தான்.. ஆனால் உங்களைப் போல பணத்தை வாரியிறைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
உங்களது நிலத்தை விற்றீர்கள்.. எனது படிப்புக்காக. என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை..
நீங்கள்தான் அப்பா என்னோட ரியல் ஹீரோ
எனக்கும் உங்களுக்குமான அன்புக்கு தூரம் கிடையாது.. எப்போதும் என்னுடனேயே நீடித்திருக்கிறது அந்த எல்லையில்லா அன்பு.
நீங்கள் ஒரு மாபெரும் தந்தை
சொர்க்கத்தில் இருக்கும் உங்களுக்கு எனது அன்பு கலந்த தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா
ஐ லவ்யூ அப்பா